Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பதிலடிப் பக்கம்
December 30, 2022 • Viduthalai

ஆளுநர் மாளிகையா? பஜனை மடமா?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், 

ஆர்.எஸ்.எஸ்.,  சங் பரிவார், 

பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

கிறிஸ்து பிறப்பதற்கு 3100 ஆண்டுகளுக்கு முன்பாகவே  முன்னோர்கள் கோள்களின் நிலையை கண்டறிந்து பஞ்சாங்கத்தை உருவாக்கி வைத்திருந் தனர். இதுபோன்ற இந்தியாவின் பழைமையை இன்றைய இளைஞர்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.

எதைப்பற்றி இளைஞர்களைப் படிக்கச் சொல்கிறார் ஆளுநர்?

பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

சந்திரனையும் கோள் என்று சொல்லும் பஞ்சாங்கத்தைப் படிக்கச்சொல்கிறாரா? ஜேம்ஸ் வெப் என்னும் தொலைநோக்கி இந்தப் பெருவெளி தோன்றிய போது கிளம்பிய ஒளியை நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளதே! அப்படி இருக்கும் போது இவர் இப்போது பஞ்சாங்கத்தைப் படியுங்கள் என்கிறார்.

பஞ்சாங்கம் என்ன சொல்கிறது? ராமன் பிறந்த நவமியும் கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியும் கெட்ட நாள் என்கிறது - இதையும் இவர் படிக்கச்சொல்கிறாரா? ஞானதேவி, சுகீர்த்தி, ரோகிணி, தாரா, உஷா, பிரத் யுஷா, சாந்திதேவி, சித்ரலேகா, நீலா, ஸிம்ஹி இவர்கள் எல்லாம் யார் தெரியுமா? 1970 களில் வெளிவந்த மாயாஜால திரைப்படங்களின் கதாநாயகிகள் அல்ல  - இவர்கள் அனைவரும் பஞ்சாங்கத்தில் குறிப் பிட்டுள்ள நவ கிரகங்களின் மனைவிகள்

இவர்கள் தான் அந்த ஜோடிகள். புதன் மனைவி ஞானதேவி, சுக்கிரன் மனைவி சுகீர்த்தி, சந்திரன் மனைவி ரோகிணி, குரு மனைவி தாரா, சூரியன் மனைவி ஷா, பிரத்யுஷா, செவ்வாய் - சாந்தி தேவி, கேது - சித்திரலேகா, சனி- நீலா. ராகு - ஸிம்ஹி,

ராகு கேது என்ற பாம்பு சூரியனையும் சந்திர னையும் விழுங்குகிறது ஆகையால் கிரஹணங்கள் தோன்றுகிறது என்று எழுதிவைத்துள்ளார்களே அதைப் படிக்கச்சொல்கிறாரா? தமிழ்நாட்டை மீண் டும் கற்காலத்திற்கு கொண்டு செல்லாமல் ஓயமாட் டேன் என்று இரவு பகலாக வேலை பார்க்கிறார் ஆளுநர். 

ஆளுநர் மாளிகையில் கொலு பூஜை, ஆளுநர் மாளிகை அரசு வாகனங்களுக்கு ஆயுதபூஜை, யாகம் வளர்த்து தசராகொண்டாட்டம் என்று கிட்டத்தட்ட ஆளுநர் மாளிகையை பஜனை மடமாக்கி விட்டார். இப்போது நம் பிள்ளைகளையும் பஞ்சாங்கம் படி யுங்கள் என்கிறார்.

சந்திரனில் போய் இறங்கிய நீல் ஆர்ம்ஸ்ட் ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியவர்கள் அங்கே ரோகிணி யைப் பார்த்தார்களா என்று ஆளுநரிடம் மாணவர்கள் கேட்டிருக்கவேண்டும்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
January 30, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பதிலடிப் பக்கம்
January 27, 2023 • Viduthalai
Image
அதானி நிறுவன ஊழல்
January 28, 2023 • Viduthalai
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 28, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn