Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
குடலில் பரவும் கெட்ட பாக்டீரியாக்கள்
December 05, 2022 • Viduthalai

குடல் உணர்வு பற்றி பலர் அடிக்கடி கூறக் கேட்டிருப்போம். அல்லது நாமே இந்த அனுபவத் தினை பலமுறை பெற்றிருப்போம். உங்கள் வயிறு, குடல் உங்களுக்கு சொல்வதினை கேளுங்கள். சில உணர்வுகள் மற்றும் எண்ணங்களை உங்கள் வயிறு சொல்லும். நீங்கள் அதனை கூர்ந்து கவனித்தாலே தெரிந்து விடும். இந்த குரல்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றன. 

நீங்கள் ஏதேனும் ஒரு முடிவு எடுக்க குழம்பு கின்றீர்களா? தனிமையில் அமைதியான சூழ் நிலையில் உங்கள் பிரச்சினையை வாய் விட்டு சொல்லுங்கள். உங்கள் மனதிற்கு மிக நெருக்க மானவர் யாராவது ஒருவரிடம் கூறுவதாக நினைத்து கூறுங்கள். சற்று நிதானம் கொடுங்கள். குடல் உணர்வுகள் உங்களுக்கு வழிகாட்டும். அதனை தெளிவாய் உணர முடியும்.

நீங்கள் எப்பொழுதுமே தனியாக இல்லை. நீங்கள் வழி நடத்தப்படுகின்றீர்கள். உங்கள் உள்ளுணர்வுகள் உங்களிடம் பேசும் பொழுது, வலியுறுத்தும் பொழுது அவற்றைக் கேளுங்கள். அவை உங்கள் நன்மைக்காகவே என நமது குடல் உணர்வு, உள்ளுணர்வு பற்றி பொதுவில் கூறுவார் கள். இதையே நாம் இப்பொழுது மருத்துவ ரீதியாகப் பார்ப்போம். நமது வாய் முதல் ஆசன வாயில் வரை நம் உடலை பாதுகாக்க நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை சிறுகுடல், பெருங்குடல் இவற்றில் அதிகமாகவே உள்ளன. இவைகளை புரோபயாட்டிக் நுண்ணுயிர்கள் என்று சொல்கிறோம். இவைகளால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. இந்த நல்ல பாக்டீரியாக்களை தான் நாம் புரோபயாடிக் என்கிறோம்.

உணவு செரித்து இன்னும் சத்துக்களை பெற இந்த பாக்டீரியாக்கள் நமக்கு அவசியம் தேவை. இது குறையும் பொழுதுதான் கெட்ட பாக்டீரியாக் கள் அதிகரித்து செரிமானமின்மை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு என ஆரம்பித்து விடும். பல நோய்களின் மூலவேர் குடலில் இருந்தே உரு வாகிறது. நம்ம ஊரு உணவுக்கு புரோபயாட்டிக் குறைவது என்பதும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பது என்பதும் நம் முந்தைய தலைமுறையில் சற்று குறைவான ஒன்றே என்று சொல்லலாம். ஏனெனில் நமது உணவுமுறை புரோபயாடிக் நிறைந்த உணவாகத்தான் இருந்தது. இட்லி, தோசை போன்ற புளித்த உணவுகள், தயிர், மோர் அதிக எண்ணெய் காரமில்லாத ஊறு காய்கள் இவை அனைத்துமே புரோபயாடிக் நிறைந்த உணவுதான். இன்று பெரிய ஓட்டல்களில் கூட வழங்கப்படும் பழைய சாதம், ஊறுகாய் கூட புரோபயாடிக் நிறைந்த உணவுதான். குடலை உணவு மண்டலத்தை பாதுகாத்தாலே நம் உடல் நன்கு இருக்கும். இன்றும் கூட பலர் நீராகாரம் என்ற பெயரில் இரவு நீரில் ஊறவைத்த பழைய சாதம், மோர், ஊறுகாய் என்று காலையில் சாப்பிடு பவர்கள் உண்டு. அவர்களை பார்த்தால் சுறுசுறுப் புடன் இனிமையாகவும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளோடும் இருப்பார்கள். பாலை சார்ந்த உணவான தயிர், மோர், சீஸ் இவைகள் எல்லாமே புரோபயாடிக் உணவுகள் தான். இவை கெட்ட கொழுப்பைத் தவிர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தி யினைக் கூட்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கும் அதிக எடை கூடியவர்களுக்கும் நன்மை பெற இந்த புரோப யாடிக்கும் அவசியம் ஆகின்றது. இப்பொழுது மீண்டும் குடல் உணர்வு என்பதனை பற்றி பார்ப் போம். நல்ல பாக்டீரியாக்கள் இருந்தால் குடல் நல்ல உணர்வுகளை மூளைக்கு அனுப்பும். நாமும் ஆக்கப்பூர்வமாக இருந்து சாதனைகளை செய்வோம். கெட்ட பாக்டீரியாக்கள் அதிகமாக இருந்தால் மூளையின் செயல்பாடும் மாறாகத்தான் இருக்கும். பிரீபயாடிக்ஸ் என்றும் சொல்கிறோம். பிரீபயாடிக்ஸ் என்றால் என்ன? புரோபயோடிக் என்பது நல்ல பாக்டீரியா. இந்த நல்ல பாக்டீரியாக் கள் நன்கு இருப்பதற்கும் அதிகரிப்பதற்கும் உணவு அளிப்பவை தான் இந்த பிரீயோடிக். வெங்காயம், பூண்டு, வாழை, நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ், பிரவுன் அரிசி, பிளாக்ஸ் விதைகள், காய் கறிகள், முழு தானிய உணவு இவை பிரீபயாடிக் நிறைந்த உணவுகள். இனிமேல் உங்களுக்கும் சரி உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கும் சரி மேற்கூறிய உணவு வகைகளையே கொடுங் கள். நவீன உணவு வகைகள் வேண்டாம்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
January 30, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பதிலடிப் பக்கம்
January 27, 2023 • Viduthalai
Image
அதானி நிறுவன ஊழல்
January 28, 2023 • Viduthalai
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 28, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn