கரோனா அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வருகிறது உலக சுகாதார அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

கரோனா அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வருகிறது உலக சுகாதார அமைப்பு

வாஷிங்டன், டிச. 17- சீனாவின் உகான் மாகாணத்தில் 2019ஆம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. 

இதுவரை உலகம் முழு வதும் கரோனா பாதிப்பால் சுமார் 66 லட்சத்திற்கும் அதி கமானோர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலுக்கு இன்னும் பன்னாட்டு சுகாதார அவசர நிலை தேவைப்படுகிறதா என் பதை தீர்மானிக்க உலக சுகா தார அமைப்பு சார்பில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆலோ சனைக் கூட்டம் நடத்தப்படு கிறது.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் பேசு கையில், 2023ஆ-ம் ஆண்டில் நாம் சந்திக்க வேண்டிய சவால் கள் நிறைய இருப்பதாகவும், எதிர்காலத்தில் கரோனா போன்ற நோய்த்தொற்று பர வல்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம் என்றும் கூறினார். கடந்த வாரம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ள நிலையில், வரும் 2023ஆ-ம் ஆண்டு முதல் கரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருதவேண்டிய அவசியம் இருக்காது என டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

அதேசமயம், கரோனா வைரசின் தோற்றத்தை நன்கு புரிந்துகொள்வதற்காக, நாங்கள் கேட்டுள்ள தரவுகளை பகிர்ந்துகொள்ளவும், ஆய்வு களை மேற்கொள்ளவும் சீனா விடம் தொடர்ந்து கூறிவருவ தாக டெட்ரோஸ் கூறினார்.

No comments:

Post a Comment