புதுடில்லி, டிச. 20, வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேர ளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற் றார். இதை எதிர்த்து கேரளா வில் சோலார் பேனல் வழக்கில் சிக்கிய சரிதா நாயர் உச்சநீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்தார். கடந்த 2020-இல் அப் போதைய தலைமை நீதி பதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சரிதா தரப்பில் வழக்குரை ஞர் யாரும் ஆஜராகவில்லை. இதைக் குறிப் பிட்டு, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த மனுவை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சரிதா தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த வழக்கை 17.12.2022 அன்று நீதிபதி கள் ஏ.எஸ்.போபண்ணா, திபங்கர் தட்டா அடங்கிய அமர்வு விசா ரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் ராகுல் காந்தியின் வெற்றி செல்லும் என அறிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment