Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
தொல்லை கொடுக்கும் ‘ஸ்பேம்' அழைப்புகளை முடக்கம் செய்வது எப்படி?
December 08, 2022 • Viduthalai

‘உங்களுக்கு லோன் வேணுமா?’, ‘கிரெடிட் கார்டு அப்ரூவ் ஆகி இருக்கு’, ‘நிதி உதவி வேணுமா?’ என தொலைப்பேசி வழியே தொல்லை கொடுக்கும் பணியை டெலிமார்க்கெட்டிங் என சொல்லி வருகி றோம். இவை ஸ்பேம் அழைப்புகள் என அறியப்படுகின்றன. 

நம்மில் பலரும் இந்த ஸ்பேம் அழைப் புகளை அன்றாட வாழ்வில் எதிர்கொள்வது வழக்கம். முக்கியமான அழைப்பு என எண்ணி எடுத்தால், அதில் வேண்டாத இந்த டெலிமார்க்கெட்டிங் பேர் வழிகள்தான் பேசுவார்கள். ட்ரூ காலர் செயலி மூலம் இப்போது வேண்டாத சில ஸ்பேம் அழைப் புகளை எளிதில் அடையாளம் காண்கிறோம். ஆனால், அதனை நிரந்தரமாக பிளாக் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

சில நேரங்களில் இந்த ஸ்பேம் அழைப்பு களின் வழியே மோசடி வேலைகளும் நடக்கிறது. இந்த அழைப்புகள் அனைத்தை யும் ஒரே நேரத்தில் பிளாக் செய்யலாம். இதற்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) தேசிய கஸ்டமர் ப்ரிஃபெரன்ஸ் ரிஜிஸ்டர் (என்சிபி ஆர்) உதவுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட சில பிரிவுகளின் கீழ் டெலி மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன் அழைப்புகளை பிளாக் செய்யலாம்.


ஸ்பேம் அழைப்புகளை தடை செய்வது எப்படி?

இவ்வித அழைப்புகளை தடுக்க 1909 எனும் எண்ணிற்கு  ‘START DND’ என டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.

சம்பந்தப்பட்ட டெலிகாம் சேவை வழங்குநரிடம் இருந்து கேட்டகிரிஸ், மோடு, டைம் பேண்ட், நாட்கள் போன்ற பிரிவுகளில் பயனர்கள் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்யும் ஆப்ஷன்கள் கிடைக்கும்.

அதில் பயனர்கள் தங்களுக்கு விருப்ப முள்ள பிரிவை தேர்வு செய்து ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்து கொள்ளலாம்.

பயனர்கள் தரப்பில் எஸ்எம்எஸ் மூலம் உறுதி செய்த 24 மணி நேரத்தில் அது செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதை செய்வதால் வங்கி, ஆன்லைன் போர்டல் தரப்பில் கிடைக்கப்பெறும் எஸ் எம்எஸ் சேவைகள் பிளாக் ஆகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல தனிப்பட்ட எண்களில் இருந்து வரும் மார்க்கெட்டிங் அழைப்புகள் பிளாக் செய்யப்படாது எனவும் தெரிகிறது.

இது தவிர ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் அய்டியா பயனர்கள் நேரடி யாக அந்த நிறுவனங்களின் வலைதளத்தின் மூலமாகவும் Do not disturb என்னும் வழிமுறையால் செய்ய முடியும்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
January 30, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
அதானி நிறுவன ஊழல்
January 28, 2023 • Viduthalai
பதிலடிப் பக்கம்
January 27, 2023 • Viduthalai
Image
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 28, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn