தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடம் கடவுச் சீட்டு உள்ளது ஒன்றிய அமைச்சகம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடம் கடவுச் சீட்டு உள்ளது ஒன்றிய அமைச்சகம் தகவல்

சென்னை, டிச. 22, நாட்டில் 9.6 கோடி பேரிடமும், தமிழ் நாட் டில் 97 லட்சம் பேரிட மும் கடவுச் சீட்டு (பாஸ் போர்ட்) இருக் கிறது என்று ஒன்றிய வெளியு றவுத்துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது. இது தொடர் பாக, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாட்டில் சில மாதங் களில் கடவுச் சீட்டு வைத்திருப்போர் எண் ணிக்கை 10 கோடியாகும். நாட்டின் மக்கள் தொகையில் கடவுச் சீட்டு வைத்திருப் போர் எண்ணிக்கை 7.2 சதவீ தமாகும். டிசம்பர் 2ஆவது வாரம் வரை மொத்தம் 9.6 கோடி பேர் கடவுச் சீட்டு வைத்துள்ளனர். கேரளா மற்றும் மராட் டியத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் கடவுச் சீட்டு வைத்துள்ளனர். தமிழ் நாட்டில் 97 லட்சம் பேரிடம் கடவுச் சீட்டு உள்ளது. இவ் வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment