தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 17- தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ் நாட்டில் வருகிற 20ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) 8 மாவட் டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போது, இந்த ஆண்டு பருவமழை இயல்பையொட்டி பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் கணித்திருந்தது. அதன்படி, தற்போது வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 3 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இதற்கு கடந்த வாரம் தமிழ்நாடு பகுதி களில் கடந்த மாண்டஸ் புயலும் ஒரு காரணம் ஆகும். 

இதன் காரணமாகத் தான் தமிழ்நாட்டில் இயல்பை தாண்டி தற்போது மழை பெய்திருக்கிறது. பருவமழை முடிய இன்னும் 2 வார காலம் முழுமையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உரு வானது. 

இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை மற்றும் அதனை யொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் கடக்க வாய்ப்பு இருக்கிறது. 

இந்த நிகழ்வு காரணமாக தமிழ்நாட்டின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு மழைக்கான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டாலும் தமிழ் நாட்டில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப் பதாகவும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, இன்றும் (சனிக் கிழமை), நாளையும் (ஞாயிற்றுக் கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மித மான மழையும், நாளைமறுதினம் (திங்கட்கிழமை) தமிழ்நாடு கட லோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங் களில் ஓரிரு இடங்களிலும் மித மான மழையும் பெய்யக்கூடும்.

8 மாவட்டங்களில் 

கனமழை

அதன் தொடர்ச்சியாக வருகிற 20ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு கடலோர மாவட்டங் கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களி லும் மிதமான மழையும், ராமநாத புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

இலங்கை கடலோரப் பகுதி களையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 20ஆம் தேதி வரை மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்ப தால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.


No comments:

Post a Comment