லக்னோ,டிச.19- அய்.நா. பாது காப்பு கவுன்சிலில் (யுஎன்எஸ்சி) கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய பாகிஸ் தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி பிரதமர் மோடியை ‘குஜராத்தின் கசாப்புக் கடைக் காரர்’ என விமர்சனம் செய்தார். இதையடுத்து, ஆட்சேபனைக் குரிய இந்த வார்த்தையை திரும்பப் பெறுவதுடன் பாகிஸ் தான் மன்னிப்புக் கோர வேண் டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் கண்டன ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. அப்போது, பாகிஸ்தான் வெளி யுறவு அமைச்சரின் உருவ பொம் மைகள் எரிக்கப்பட்டன.
உத்தர பிரதேசத்தில் நடை பெற்ற போராட்டத்தின் போது அந்த மாநில பாஜக விவசாய பிரிவு தலைவர் மனுபால் பன்சால் தெரிவித்ததாவது:
நாம் மிகவும் மதித்து போற் றக் கூடிய பிரதமர் நரேந்திர மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் நாகரீகமற்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே தான், பாகிஸ் தான் அமைச்சர் பிலாவல் புட் டோவின் தலையை கொண்டு வரு வோருக்கு ரூ.2 கோடி சன்மா னத்தை அறிவித்துள்ளேன். -இவ் வாறு மனுபால் பன்சால் கூறினார்.
No comments:
Post a Comment