தமிழ்நாட்டில் டிச. 19 முதல் மழை பொழிய வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

தமிழ்நாட்டில் டிச. 19 முதல் மழை பொழிய வாய்ப்பு

சென்னை, டிச. 16- தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், அதன் தாக்கத் தால் வரும் 19ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண் ணன் நேற்று (15.12.2022) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ் வுப் பகுதியாக வலுப் பெறக்கூடும். அதே பலத் துடன் வரும் 17ஆம் தேதி தெற்கு வங்கக் கடலில் நிலைபெறும். தொடர்ந்து இலங்கை அருகே சென்று, பின்னர் தமிழ்நாடு நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.

இதன் தாக்கத்தால் வரும் 19ஆம் தேதி தென் மாவட்டங்களிலும், வரும் 20, 21ஆம் தேதி களில் தென் மாவட்டங் கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வரும் 22ஆம் தேதி புதுச்சேரி முதல் திருவள் ளூர் வரை உள்ள கட லோர மாவட்டங்கள், அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். கனமழை வாய்ப்பு குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும்.

No comments:

Post a Comment