டில்லி - ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டில் பேட்டி (1.12.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

டில்லி - ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டில் பேட்டி (1.12.2022)

எங்களுடைய பார்ப்பனர் எதிர்ப்பு என்பது மனிதாபிமானத்தின் அடிப்படையிலானது!

- அருண் ஜெனார்த்தனன்


தந்தை பெரியார் காட்டியவழியில் 80 ஆண்டுகள் - 90ஆவது பிறந்த நாள் காணும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணியின் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் டில்லி பதிப்பின்' நேர்காணலின் தமிழாக்கம்:

திராவிடர் கழகத்தின் தலைவரும், பெரியார், அறிஞர் அண்ணாவின் தோழருமான கி.வீரமணி, தமிழ்நாட்டில் திராவிடக் கொள்கைகள் குறித்த கருத்தியல் மற்றும்  தமிழ்நாடு திராவிட அரசியல் கருத்துக்களத்தின் அச்சாணியாக இருக்கிறார்.

ஆசிரியர் கி.வீரமணியின் வாழ்க்கை தமிழ் நாட்டு திராவிட அரசியலோடு தொடர்ந்து பயணிக்கிறது. திராவிட இயக்கங்களின் தாய்க்கழகமான திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 90 வயதை கடக்கிறார்.

தமிழ்நாட்டை ஆளும் மு.க.ஸ்டாலின் தலை மையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின். திராவிடக் கொள்கை தொடர்பாக பா.ஜ.க.வுடன் கொள்கை ரீதியாக கருத்துக்களத்திலும், அரசியல் ரீதியான தங்கள் நிலைப்பாட்டில் வலுவான எதி ரணியாக நிற்கும் நிலையில், சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியாரால் நிறுவப்பட்ட திராவிடர் கழகம் வழிகாட்டுகிறது.

தந்தை பெரியார், தி.மு.க-வை நிறுவிய அறிஞர் அண்ணா மற்றும் தி.மு.க தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருடன் அரசியல் பணியாற்றிய ஆசிரியர் கி. வீரமணி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங் கில நாளிதழிடம் பேசும்போது, திராவிட கருத்திய லால் அதன் அரசியல்விழிப்புணர்வினால். பகுத்த றிவு,  அறிவியல் சிந்தனையாலும் அதை ஆழமாக உள்வாங்கியதாலும் தமிழ்நாடு செழித்திருக்கிறது என்று கூறினார்.

“சமூக நீதி, சமத்துவம், தொழில்மயமாக்கல், உற்பத்தி, சுகாதாரம், கல்வி போன்றவற்றில் தமிழ் நாட்டை சிறந்த மாநிலமாக மாற்றியது எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பகுத்தறிவு சிந்தனையில் நாம் பின்பற்றும் திராவிட அரசியலால்தான் அதெல் லாம் சாத்தியமானது.”என்று கி. வீரமணி கூறினார்.

அறிவியல் சிந்தனையை  மதத்திற்கு - முக்கியமாக ஹிந்து மதத்திற்கு எதிரானது என்று  எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை. ஹிந்து மதத்திற்கு எதிரானாது என்று தி.மு.க.மீது அதன் எதிரிகளால் அடிக்கடி குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என்று கூறிய  ஆசிரியர், “நாங்கள் எங்களுடைய மக்களுக்கு எதிரானவர்கள்' என்று எங்களுடைய எதிரிகள்தான் கூறுவார்கள். 

பார்ப்பனர்களுக்கு எதிராக எங்களிடம் எதுவும் இல்லை. ஆனால், பார்ப்பனியம், மற்றும் பார்ப்பன சக்திகளுக்கு எதிராக எங்களிடம் ஏதோ இருக்கிறது. நமது பார்ப்பன எதிர்ப்பு என்பது மனிதாபிமானமாக இருப்பதுதான். ‘பார்ப்பன ஆதிக்கம்’ என்ற வார்த் தையை பெரியார் கொண்டு வந்தார். அதுதான் இன்றும் நாட்டை நடத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதி கள் மற்றும் அதிகாரிகளின் ஜாதியைப் பார்த்தால் உண்மையாக இருக்கிறது” என்று ஆசிரியர் கூறினார்.

சில எதிர்ப்பாளர்கள், திராவிடர் கழகம், தி.மு.க. வின் கொள்கையை வகுக்கிறது என்றும், ஆர்.எஸ். எஸ்., பா.ஜ.க அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செல்வாக்கைக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

“ஆர்எஸ்எஸ் ஒரு பாசிச தத்துவம் கொண்ட ஒரு ரகசியக் குழு. அதே நேரத்தில் நாங்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூறுகிறோம். எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. பெரியார் உயிருடன் இருந்தபோது, ​​எந்தப் போராட் டமோ, பொது நிகழ்ச்சியோ நடந்தால், காவல்துறையிடம் சென்று நேரத்தையும் இடத்தையும் சொல்லச் சொல்வார். நாங்கள் அதிகபட்சம் ஒரு அழுத்தக் குழுவாக இருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க- வுக்கு பொறுப்பாளராக இருக்கிறது. ​​நாங்கள் தி.மு.க- வுக்கு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. திராவிடர் கழகத்திற்கும் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க் கும் பொதுவான ஒரே விஷயம், இரண்டு இயக்கங் களும் தேர்தலில் போட்டியிடுவதில்லை.” என்று  ஆர்.எஸ்.எஸ். குறித்து தனது கருத்துக்களை முன் வைத்தார் ஆசிரியர்.

மேலும், “பார்ப்பனீயத்தின் மீதான எங்களு டைய எதிர்நிலை வெறுப்பின் அடிப்படையிலா னது இல்லை. ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களுக்குச் செய்வதைப்போல நாங்கள் பார்ப்பனர்களுக்குச் செய்வதில்லை.” என்று ஆசிரியர் கூறினார்.

ஆசிரியர் கி.வீரமணி  தந்தை பெரியாருடன் இணைந்து செயல்பட்டவர். சிறுவன் சாரங்கபாணியை முதன்முதலில் பெரியாருக்கு அறிமுகப்படுத்தியவர் ஏ.பி.ஜெனார்த்தனம் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் சுப்ரமணியன் (ஆ.திராவிடமணி). தனது மாணவர்களிடம் பெரியாரைப் பற்றியும், அப்போது பிரபலமடைந்து வந்த அவரது பகுத் தறிவு சிந்தனைகளைப் பற்றியும் கூறினார்.

 திராவிட சிந்தனையைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றிய பேச்சுப் போட்டியில் அவர்களை பயிற்றுவித்தார்.

 ஆசிரியர் கி.வீரமணிக்கு 10 வயதாக இருக்கும் போது - ​​1944 ஆம் ஆண்டு நடைபெற்ற திராவிடர் கழகத்தின் கடலூர் மாநாட்டில் பேச சாரங்கபாணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பேச்சில் பார் வையாளர்களாக இருந்த பெரியாரும் அண்ணாவும் ஈர்க்கப்பட்டனர். அந்த மாநாட்டில் தனக்குப் பிறகு பேசிய அண்ணாதுரை, ‘இந்தக் குழந்தை பகுத்தறி வுப் பாலைக் குடிக்கிறது, பார்வதியின் பால் அல்ல’ என்று கூறியதைஆசிரியர் வீரமணி நினைவு கூர்ந்தார்.

விரைவில், சாரங்கபாணி திராவிடர் கழகத்தின் மிகவும் பிரபலமான பேச்சாளர்களில் ஒருவராக ஆனார். திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப் பரப்புரை செய்ய அனுப்பப்பட்டார். “பொதுக் கூட்டங்களின் சுவரொட்டிகளும் கைப்பிரதிகளும் என்னை ‘கடலூர் மாநாட்டில் பேசிய குழந்தை’ என்று குறிப்பிடுகின்றன” என்று ஆசிரியர் சிரித்துக் கொண்டே கூறுகிறார். அத்தகைய பிரதிகளை இன் றும் பிரேம் செய்து பாதுகாத்து வைத்திருப்பதைக் காட்டினார்.

அவர் தனது ஆசிரியர் உள்பட மற்ற திராவிடத் தலைவர்களைப் போலவே இந்து மதத்தின் அடை யாளங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள ‘வீரமணி’ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். 1944 வாக்கில் பெரியாரின் நீதிக்கட்சியும் திராவிடர் கழகம் என்ற பெயரைப் பெற்றது.

வீரமணி திராவிடர் கழகத்தின் திராவிட மாணவர் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளா தாரத்தில் பட்டம் பெற்ற பிறகு, சில காலம் ஆசிரிய ராக இருந்தார். பின்னர், சட்டப் படிப்புக்காக சென்னைக்குச் சென்றார்.

1949இல் அறிஞர் அண்ணா திராவிடர் கழகத் தில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக்கழகத்தை நிறுவினார். பல தலைவர்கள் அண்ணாவின் கருத் தியலால் ஈர்க்கப்பட்டார்கள் என்றும், ஆனால்,  ஆசிரியர் வீரமணி மற்றும் மிகவும் குறைவான தோழர்கள் திராவிடர் கழகத்தின் பின் அணிவகுத்து ஆதரவாக நின்றார்கள் என்றும் வீரமணி கூறுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பழக்கவழக் கங்கள் தொடர்பாக பெரியாரின் கடுமையான விதிமுறைகளைப் பற்றி ஆசிரியர் வீரமணி, “அது எப்போதும் எளிதானது அல்ல.” என்று கூறுகிறார்.

திராவிட இயக்கப் போராட்டத்தில் தனது நீண்ட காலப் போராட்டத்தின் சவால்களைப் பற்றி, 1972இல் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில், அவர் களுக்கு அச்சு இயந்திரம் நிறுவ வந்த ஒரு ஜெர்மன் தூதுக்குழுவை ஆசிரியர் வீரமணி எடுத்துக் காட் டாகக் காட்டுகிறார். “நல்ல நேரம்: 24 மணிநேரம்” என்று எழுதப்பட்ட ஒரு பத்தியுடன் கூடிய திராவிடர் கழகத்தின் காலண்டரை கி.வீரமணி காட்டுகிறார். அப்போது அவர்கள் ஜெர்மன் தூதுக்குழுவிடமும் அதையே கூறினார்கள்.

உலகம் பெரிய அளவில் நவீன மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், பெரியாரின் நெகிழ்ச்சி யான செய்தியை வீரமணி குறிப்பிடுகிறார். பெரியார் எதையுமே பிறர் மீது திணிக்க வேண்டாம் என்று கூறுவதை நினைவூட்டுகிறார்.

மேலும் இட இதுக்கீடு கொள்கையில் புதிய பாதை திராவிடர்கழகத்தின் தலைவர் ஆசிரியர் தலைமையில் தமிழ்நாடு கண்டது, முக்கியமாக இவர் வகுத்துகொடுத்த 69 சதவீத இடஒதுக்கீடு கொள்கைவகுத்து அதற்கு அரசமைப்புப் பாது காப்பும் கொடுக்கவழிவகை செய்தார்

90 வயதாகும் ஆசிரியர் வீரமணி, பெரியாரின் சொத்துக்கள் மற்றும் அறிவுசார் மரபு இரண்டையும் ஏகபோக உரிமையாக்கிக்கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளும், பிற தமிழ்நாடு தலைவர்களைப் போலவே கல்வி நிறுவனங்களை நடத்தினார் என்ற குற்றச்சாட்டுகளும் எதிரிகளால் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வந்தது, இருப்பினும், நீண்ட கால பொது வாழ்க்கையில் இருந்தவர் - அவரின் தொண்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிந்த நிலையில் தன்மீதான எதிரிகளின் விமர்சனங்களை எதிர் கொண்டு தனது பொதுவாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறார்.

No comments:

Post a Comment