இராமேசுவரத்தில் பெரியார் 1000 மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

இராமேசுவரத்தில் பெரியார் 1000 மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசளிப்பு

இராமேசுவரம், டிச. 15- இரா மேசுவரம் கரையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் பெரியார் 1000 வினா-விடை போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு களாக பதக்கமும் பண மும் வழங்கப்பட்டது 

கழக மண்டல தலை வர் கே.எம்.சிகாமணி வழங்கினார் உடன் மாவட்ட தலைவர் முருகேசன் உள் ளார். பள்ளி முதல்வர் ஆலியா ஜெமீன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். 

இராமேசுவரம் அருகே அக்காமடம் ஆன்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினா--விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசுகளாக பதக்கமும் பணமும் வழங்கப்பட்டது பரிசு களை மண்டல தலைவர் கே.எம். சிகாமணி வழங் கினார்.சான்றிதழ்களை  மாவட்ட தலைவர் முரு கேசன் வழங்கினார். தங்கச்சி மடம் முத்துக் கருப்பன், மதிமுக கெவின்குமார் கலந்து கொண்டனர் தலைமை ஆசிரியை விரிவான ஏற்பா டுகளை செய்திருந்தார்.

No comments:

Post a Comment