தமிழ்நாட்டுக்கு வாரீர்! முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

தமிழ்நாட்டுக்கு வாரீர்! முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை,நவ.9- சென்னை தரமணி யில் உள்ள டைடல் பூங்கா வளாகத்தில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (8.11.2022) தொடங்கி வைத்தார். மேலும் விமானி பயிற்சி நிறுவனத்தை தொடங்கி வைத்து 'ஆளில்லா விமான' கண்காட்சியையும் பார்வையிட்டார். 

பின்னர் இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

 "கடந்த பதினைந்து மாத காலமாகத் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் போய்க் கொண்டு இருக்கிறது என்பதை எனக்கு முன்னாலே உரையாற்றிய அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதி லும் குறிப்பாக தொழில் துறையானது மிகவேகமான முன்னேற்றங்களை உரு வாக்கித் தந்து வருகிறது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

தொழில் துறையைப் பொறுத்த வரையில், இந்திய அளவிலான கவனத்தை மட்டுமல்ல, - உலக அளவி லான கவனத்தையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது என்பதை நான் இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதற்குக் காரணமான தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறைச் செயலாளர் கிருஷ்ணன், அவர் களுக்குத் துணைநின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தொழில் துறை அதிகாரிகளையும் இந்த நேரத்தில் நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

தொழில் துறை சார்பில், கடந்த பதினைந்து மாதத்தில் எத்தனையோ மாநாடுகளை நாம் நடத்தி இருக்கி றோம். முதலீடுகளை ஈர்ப்பதற்காக, திட்டங்களை வகுப்பதற்காக ,தொழிற் கொள்கைகளை வெளியிட, ஒப்பந் தங்களைப் போடுவதற்காக இப்படி ஏராளமான மாநாடுகள் நடத்தப் பட்டுள்ளன. அவை அனைத்தும் மொத்தத்தில் தமிழ்நாட்டுக்கு பலன் தரும் மாநாடாக அமைந்திருக்கிறது. அந்த வரிசையில் இன்று இந்த நிகழ்ச் சியும் ஒருங்கிணைக்கப்பட் டுள்ளது.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு வான் வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை, 2022-அய் வெளியிடுதல், மேம்பட்ட உற்பத்திக்கான இரண்டு திறன்மிகு மய்யங்களை திறந்து வைத்தல்,மதுரை மற்றும் சென்னையில் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி நிறுவனங்களை ( (Remote Pilot Training Organisation) தொடங்கி வைத்தல், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுதல் ஆகிய பல நிகழ்வுகள் இந்த நிகழ்ச்சியிலே நடந்தேறி இருக்கின்றன. தமிழ் நாட்டின் தொழில் துறைக்கு நான் வைத்துள்ள இலக்கு மிகப்பெரியது.

2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில் லியன் அமெரிக்க டாலர் பொரு ளாதாரத்தை அடைய வேண்டும். இதை அடைய தமிழ்நாட்டு தொழில் துறை தொய்வில்லாமல் பணியாற்றி வருகிறது என்பதை நானும் அறிவேன், நீங்களும் நன்கு அறிவீர்கள். அதன் ஒரு பகுதியாகத்தான், இன்றைய நாள் மேம்பட்ட உற்பத்திக்கான இரு திறன் மிகு மய்யங்கள் துவக்கி வைக்கப் பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உயர்கல்விச் சேர்க்கை விகிதம் நாட்டின் சராசரி யைவிட மிக அதிகமாக 51.4 விழுக் காடாக உள்ளது. திறன்மிக்க பணியா ளர்களை நமது மாநிலம் பெற்றுள்ளது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ் நாட்டை நோக்கி வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந் திருக்கிறது. இதனை நாம் தக்கவைத்துக் கொள்வதோடு, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப திறன்கள் வளர்ப்பு

நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர் களின் திறன்களை வளர்த்து, முன்னேற் றுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத் தான், இந்த திறன்மிகு மய்யங்கள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. பொது வாக, உற்பத்தித் துறையைவிட சேவைத் துறையில் கவனம் செலுத்தினால்தான் பெரிய அளவிலான வளர்ச்சி பெற இயலும் என சிலர் கருதுகின்றனர். ஆனால், நம்மைப் பொறுத்தவரை உற் பத்தித் துறை மற்றும் சேவைத் துறை ஆகிய இரண்டிலுமே முன்னணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் அனை வரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியை நாம் பெற்றிட முடியும்.

எனவேதான், நான்காம் தலைமுறை தொழில்வளர்ச்சி (Industry 4.0)  தொடர் பான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும், இந்த மேம்பட்ட உற் பத்திக்கான திறன்மிகு மய்யங்கள் வெகுவாக உதவும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த திறன்மிகு மய்யங்களைப் பயன்படுத்திக் கொண்டு, வெகு விரைவில் முன்னேற்றம் காண இயலும். சீமென்ஸ் மற்றும் நிணி ஏவியேஷன் ஆகிய பன்னாட்டு நிறுவ னங்களுடன் இணைந்து, இவ்வாறான மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மய்யங்களை டிட்கோ நிறுவனம் இங்கு அமைத்துள்ளது.

இந்தத் திறன்மிகு மய்யங்களில் நவீன மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்குத் தேவையான அம்சங்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. இவற்றை, சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழில் துறையினரை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 251 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் டைடல் பார்க்கில் அமைந்துள்ள இந்தத் திறன்மிகு மய்யம், நாட்டிலேயே இத்தகு முதல் திறன்மிகு மய்யம் என்பது குறிப்பிடத்தக்கது.

மெய் நிகர் பயிற்சி

இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் திறன்மிகு மய்யங்களில், தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், மெய்நிகர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திறன்மிகு மய்யம், “நான் முதல்வன்” திட்டத்தின் குறிக்கோள்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வை யுடன் ஒருங்கிணைந்து செயல்படும். டிட்கோ மற்றும் நிணி ஏவியேஷன் நிறுவனங்கள் இணைந்து, ரூபாய் 141 கோடி முதலீட்டில், 3D அச்சிடுதல் தொழில்நுட்பத்தில், உலகத் தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்திக்கான (Additive Manufacturing Centre) TAMCOE  திறன்மிகு மய்யத்தினை உருவாக்கி யுள்ளது.

இந்த மய்யங்களிலிருந்து மேம்படுத் தப்பட்ட தொழிற்சாலைகள் மூல மாகவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனங்கள் மூலமாகவும், நமது மாநிலத்திற்கு அதிக காப்புரிமைகள் கிடைக்கும். எனவே, அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடுகளுடன், தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித் திடும் சக்தியாகவும் இந்த திறன்மிகு மய்யங்கள் விளங்கிடும். தொழில் வளர்ச்சி -   (Industry 4.0) தொடர்பான நவீன தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்திடும் வகையில் இத் திறன்மிகு மய்யங்கள் செயல்படும் என்பதால், மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறன் வெகுவாக மேம்படும்.

வான்வெளி  - பாதுகாப்பு உற்பத்தி

வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திச் சூழல் அமைப்பைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு எப்போ துமே, முன்னணி மாநிலமாகத்தான் இருந்து வருகிறது. வரலாற்று ஏடுகளை சற்றே புரட்டிப் பார்த்தோமானால், உலகின் மிக வலிமையான கடற் படையாகச் சோழ மன்னர்களின் கடற் படை இருந்துள்ளது. காலாட்படையை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் முதல் காலாட்படைப் பிரிவு, மெட்ராஸ் ரெஜிமெண்ட்தான். அதுவரை அய்ரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த விமானங்கள், முதல் முறையாக, இந்தியாவில் 1910-ஆம் ஆண்டு சென்னையில்தான் தயாரிக்கப்பட்டது.

இன்றும் கூட, HAL நிறுவனத்தின் இலகுரகப் போர் விமானங்களின் பெரும்பான்மையான உதிரிபாகங்கள் தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்துறையில் உற்பத்தித் திறனை வெகுவாக அதிகரிப்பதற்கும், தன்னிறைவு பெறுவதற்குமான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. மாநில வளர்ச்சிக்கும், அதன் கூடவே வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை வளர்ச்சிக்கும் ஏதுவாக, இத்துறையை வளர்ந்து வரும் துறையாக (Sunrise Sector) அறிவித்து, முன்னேற்ற நடவடிக்கைகளை இந்த அரசு மேற் கொண்டு வருகிறது. கடந்த 12 மாதங் களில், துறைசார்ந்த பல கொள்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இன்று தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022-அய் வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

10 ஆண்டு கால கட்டத்திற்குள் 1 லட்சம் பேருக்கு வேலை

10 ஆண்டு காலகட்டத்திற்குள், 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் என்ற இலக்கை நாங்கள் இதன் மூலம் நிர்ணயித்திருக்கிறோம். அண்மைக் காலங்களில், Drone எனப் படும் ஆளில்லா விமானங்கள் எத் தகைய வளர்ச்சி அடைந்துள்ளது என் பதையும், வாழ்வாதாரத்தை எவ்வாறு மாற்றியமைத்து வருகின்றன என் பதையும் கண்கூடாகக் காண்கின்றோம். வேளாண் துறையானாலும், சட்டம் ஒழுங்கானாலும், பாதுகாப்பு ஆனா லும், எந்தத் துறையை எடுத்துக் கொண் டாலும், ஆளில்லா விமானங்கள் தற்போது பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இது மேலும் வளர்ச் சியடைந்திடும் என்பதில் அய்யமேது மில்லை. இந்த ஆளில்லா விமானங் களை இயக்கிட ஆளில்லா விமானங் களை இயக்குபவர்கள்  (Drone Pilots)  அல்லது ரிமோட் பைலட்டுகள் தேவை.

ஒன்றிய அரசின், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி மற்றும் DE Drone ஆகிய நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் இணைந்து பணி யாற்றி, இந்த ரிமோட் பைலட் பயிற்சி அமைப்பினை மதுரை மற்றும் கோயம் புத்தூர் நகரங்களில் நிறுவியுள்ளது. அவற்றை இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் நான் தொடங்கி வைத் துள்ளேன். இதன் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற விகிதத்தில் பயிற்சி அளித்திட இயலும். ஓராண்டிற்குள் கிட்டத்தட்ட 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், நமது கிராமப்புற படித்த இளைஞர்கள் ஆளில்லா விமான பைலட்டுகளாக தகுதி பெற்று உலகை வலம் வர முடியும்.

தமிழ்நாட்டின் அனைத்து தொழில் வாய்ப்புகளையும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட் டுக் கொள்கிறேன். தேசிய அளவில் மட்டுமின்றி, தெற்காசியாவிலேயே, தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநில மாகத் தமிழ்நாட்டை உருவாக்க வேண் டும் என்ற இலட்சிய இலக்கினை அடைவதற்காக நாம் அனைவரும் கைகோர்த்து உழைப்போம்" என்று அவர் பேசினார்.


No comments:

Post a Comment