Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு...
November 01, 2022 • Viduthalai

கழகத் தலைவரின் உயிருக்குக் குறி வைக்கத் திட்டமா?

உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

‘தினமலர்' குரூப் ‘காலைக்கதிர்' என்ற ஏட்டையும் நடத்தி வருகிறது.

அதன் 30.10.2022 நாளிட்ட ஏட்டில், ‘‘அன்புமணி பதில்கள்'' என்ற தலைப்பில் கீழ்க்கண்ட கேள்வி- பதிலை வெளியிட்டுள்ளது.

கே.மாரியப்பன், பெருந்துறை

கேள்வி: ‘‘தன்னைத் தானே, ‘தமிழர் தலைவர்' எனக் கூறிக் கொள்ளும், தி.க., தலைவர், வீரமணி, ஹிந்து மதத்தில் உள்ள, ஒரு ஜாதியை மட்டும் விடாமல் திட்டியும், மட்டம் தட்டியும் வருகிறாரே... மற்ற ஜாதிக்காரர்களைப்பற்றி, வாய் திறப்ப தில்லையே... இது ஏன்?

பதில்: இவர் திட்டும் ஜாதியினர் கம்போ, தடியோ கையில் எடுக்கமாட்டார்கள் என்ற தைரி யம்தான்! அதே ஜாதிக்காரனான, வட மாநிலத் தைச் சேர்ந்த ஒருவன், கோபம் வந்தபோது, இத்தேச விடுதலைக்காக தலைமை நின்றவரை என்ன செய்தான்... அதற்குமுன், மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆஷ் என்ற வெள்ளைக்கார கலெக்டரை சுட்டுக்கொன்று, தானும் சுட்டுச் செத்தான் இதே ஜாதிக்காரன்.

ஹிந்து மதத்தையும், அதில் ஓர் அங்கமான அந்த ஜாதியையும் எதிர்ப்பவர்கள், ஒன்றுகூடி, பொதுக்கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது.

அப்போது, அதே ஜாதியைச் சேர்ந்த வெறி கொண்ட இளைஞன் ஒருவன், இவர்களை ‘கவனிக்க' வாய்ப்பு ஏற்பட்டுவிட்டால்...

எனவே, இவர்கள் கவனமாக இருக்க வேண் டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

என்று ‘காலைக்கதிர்' ஏட்டில் (30.10.2022) வெளி வந்துள்ளது.

2019 மார்ச் 3 ஆம் தேதி ‘தினமலர்' வார மலரில்,

கே.வெங்கட்ராமன், தென்காசி என்பவர் பெயரால் வெளிவந்துள்ள கேள்வி - பதில் வருமாறு:

‘‘தன்னைத் தானே ‘தமிழர் தலைவர்' எனக் கூறிக் கொள்ளும் தி.க. தலைவர் வீரமணி ஹிந்து மதத்தில் உள்ள ஒரு ஜாதியை மட்டும் விடாமல் திட்டியும், மட்டம் தட்டியும் வருகிறாரே - மற்ற ஜாதிக் காரர்களைப்பற்றி வாய் திறப்பதில்லையே, இது ஏன்?

பதில்: இவர் திட்டும் ஜாதியினர் கம்போ, தடியோ கையில் எடுக்கமாட்டார்கள் என்ற தைரியம்தான்.

அதே ஜாதிக்காரரான வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவன் கோபம் வந்தபோது இத்தேச விடுதலைக்காக தலைமை நின்றவரை என்ன செய்தான்... அதற்கு முன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் என்ற வெள்ளைக்கார கலெக்டரை சுட்டுக்கொன்று, தானும் சுட்டுச் செத்தான் இந்த ஜாதிக்காரன்.

இப்பொழுது தேர்தல்கள் நெருங்குகின்றன. இந்து மதத்தையும், அதில் ஓர் அங்கமான அந்த ஜாதியையும் எதிர்ப்பவர்கள் ஒன்று கூடி பொதுக்கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது. 

அப்போது, அதே ஜாதியைச் சேர்ந்த வெறி கொண்ட இளைஞன் ஒருவன் இவர்களை ‘கவனிக்க' வாய்ப்பு ஏற்பட்டுவிட்டால்...

எனவே, இவர்கள் கவனமாக இருக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிடப்பட்டது. (‘தினமலர்', 3.3.2019).

29.3.2019 ‘தினமலர்' வார இதழில் கேள்வி கேட்டவர் பெயர் கே.வெங்கட்ராமன் - 30.10.2022 நாளிட்ட ‘காலைக்கதிர்' ஏட்டில் கேள்வி கேட்டவர் பெயர் கே.மாரியப்பன், பெருந்துறை.

இரண்டிலும் கேள்விகளும், பதில்களும் வாசகம் மாறாமல் அப்படியே இருக்கின்றன.

இது ‘தினமலர்' கூட்டத்திற்கே உரிய தில்லு முல்லு - பித்தலாட்டம் எத்தகைய யோக்கியதையானது என்பது இதன்மூலம் தெரிகிறது.

தினமலரின் நோக்கமும் காலைக்கதிர் நோக்கமும் திராவிடர் கழகத் தலைவரின் உயிர்மீது குறி வைப்பதே!

கோட்சே, காந்தியாரைச் சுட்டுக் கொன்றது போலவும், வாஞ்சி நாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றதுபோலவும்,  திராவிடர் கழகத் தலைவரின் உயிருக்குக் குறி வைக்கத் தூண்டும் நோக்கம் இதன் மூலம் வெளிப்படையாகவே தெரிகிறது.

ஏற்கெனவே திட்டம் தீட்டி வைத்துள்ளனர் என்று கருதுவதற்கும் இடம் இருக்கிறது.

இதன்மீது தமிழ்நாடு அரசு, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் - எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்!

உரிய முறையில்  புகாரும் அளிக்கப்படும் என்ப தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர்கள் பதற்றம் அடையவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

1.11.2022

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாத முதல் 10 நாடுகள்!
February 16, 2022 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn