அதிர்ச்சித் தகவல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

அதிர்ச்சித் தகவல்!

'கடந்த 5 ஆண்டுகளில் 51,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்'

புதுடில்லி, நவ.1- கடந்த 5 ஆண்டுகளில் 51,000 குழந் தைகள் பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளானதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாது காப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

சட்டங்கள் இருந்தாலும் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள், வன்முறைகள் நாட்டில் தொடர்ந்து அதி கரித்தே காணப்படுகின்றன.

குழந்தைகளின் உரிமை களைப் பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், உரிமை களைப் பெற போராடுவதற்கும் செய்யப்படும் அதிகாரபூர்வ அமைப்பான தேசிய குழந் தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2016-2017 முதல் 2020-2021 வரையிலான அய்ந்து ஆண்டுகளில் 50,857 குழந் தைகள் பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 9,572 புகார்கள் வந்துள்ளதாகவும் அடுத்ததாக உத்தரப் பிரதேசத் தில் இருந்து 5,340 புகார்களும் வந்துள்ளதாக அதில் கூறப்பட் டுள்ளது.

மேலும் அடுத்த மூன்று இடங்களில் ஒடிசா, ஜார்க் கண்ட், சத்தீஸ்கர் முறையே 4,276, 3,205 மற்றும் 4,685 என்ற அளவில் உள்ளன.

தேசிய குழந்தைகள் உரி மைகள் பாதுகாப்பு ஆணையம், இதுபோன்ற குற்றங்களுக்கு எதி ராக குழந்தைகளுக்கு பாது காப்பை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கையேடு வழங்குதல், சைபர் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள், கல்வி நிறுவன தங்குமிடங்கள், விடுதிகளுக் கான வழிகாட்டுதல்கள், இணையப்  பாதுகாப்பு குழந்தை பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் உள் ளிட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

மநுதர்மம், சனாதனம் என்றெல்லாம் கூறிக்கொண்டு ஆணுக்கு பெண் அடிமை என் கிற அடிமைத்தனத்தை வேரூன்றச் செய்கின்ற இந்துத் துவாவை வலியுறுத்துகின்ற அரசாக ஒன்றிய பாஜக அரசு உள்ள நிலையிலேயே இது போன்ற பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் பெருகிய வண்ணம் உள்ளன. பெண் களைப் போகப்பொருளாகக் கருதாமல், பெண்கள், குழந்தை களுக்கான வாழ்வுரிமை, அடிப் படை மனித உரிமை பேணிக் காக்கப்படுவதுடன், பெண் களும் ஆணுக்கு நிகரானவர்களே என்கிற சமத்துவ சிந்தனை மேலோங்கினால் மனிதத் தன் மையற்ற பாலியல் வன்முறைகள் குறையும். 

No comments:

Post a Comment