இராணுவத்தில் பெண் காவலர் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

இராணுவத்தில் பெண் காவலர் பணி

சென்னை, நவ. 25- இந்திய இராணுவத்தில் பெண் காவலர் பணிக்கு ஆட் களை தேர்வு செய்வதற் கான ஆட்சேர்ப்பு முகாம் நவ.27 முதல் 29ஆம் தேதி வரை வேலூரில் உள்ள மாவட்ட விளையாட்ட ரங்கில் நடைபெறுகிறது.

இதில், பங்கேற்பதற் கான அனுமதிச் சீட்டு கிடைத்த தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இதுதொடர்பாக, கடந்த ஆக. 8இல்வெளியிடப் பட்ட அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள தங்க ளது சான்றிதழ்களுடன் வந்து பங்கேற்கலாம்.இதுகுறித்து கூடுதல் விவரங்களை  www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இத்தேர்வு வெளிப் படையாகவும், நேர்மை யாகவும் நடைபெறும். எனவே, விண்ணப்பதாரர் கள் யாரிடமும் பணம் கொடுத்துஏமாற வேண் டாம் என பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment