மழை பாதிப்புப் பகுதிகளில் மருத்துவ முகாம் அமைச்சர் மா.சு. அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

மழை பாதிப்புப் பகுதிகளில் மருத்துவ முகாம் அமைச்சர் மா.சு. அறிவிப்பு

சென்னை, நவ.6 சென்னையில் பருவ மழையினால் ஏற்படும் மழைக்கால வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க 200 வார்டு களிலும் சிறப்பு மருத்துவ முகாம் கள் நடத்தப்படும் என சமீபத்தில் ரிப்பன் மாளிகையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

 அதன்படி, இந்த மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்கும் விதமாக கோடம்பாக்கம் வண்டிக்காரன் தெரு ராணி அண்ணா நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, பெரு நகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- தற்போது பெய் துள்ள மழையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் மழைக் கால வியாதிகளான காய்ச்சல், சளி, தொண்டை வலி, சேற்றுப்புண் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப் படையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து இன்று 200 வார்டுகளிலும் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இம்முகாம்களில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவ மனைகளில் இருந்து மருத்துவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment