ஆடை இல்லாமல் இருந்தால் பெண்கள் அழகாக தெரிவார்கள் முதலமைச்சரின் மனைவி முன்பு பேசிய கருப்புப் பணப் புகழ் சாமியார் ராம்தேவின் வக்கிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

ஆடை இல்லாமல் இருந்தால் பெண்கள் அழகாக தெரிவார்கள் முதலமைச்சரின் மனைவி முன்பு பேசிய கருப்புப் பணப் புகழ் சாமியார் ராம்தேவின் வக்கிரம்

 தானே, நவ 28 பதாஞ்சலி நிறுவனத்தலைவர், கருப்புப் பணப்புகழ் சாமியார் ராம்தேவ், எனது பார்வையில் பெண்களில் ஆடையில்லாமல் இருப்ப வர்கள் மிகவும் அழகாக இருப் பார்கள்" என்று கூறியிருந்தார் அவரின் இந்த ஆபாச மான பேச்சிற்கு மகாராட்டிர மாநில மகளிர் ஆணையம் விளக்க அறிக்கை கேட்டு கடிதம் எழுதி உள்ளது, சாமி யாருக்கு எதிராக மகாராட்டிரம் மற்றும் புது டில்லியில் போராட்டம் நடை பெற்று வருகிறது

மகாராட்டிர மாநிலம் தானேயில் நடந்த ஒரு விழாவில், சாமியார் ராம்தேவ் பேசும் போது "பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், பெண்கள் சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள், என் பார்வையில் அவர்கள் ஆடையே அணியாமல் இருந்தால் அழ காக இருப்பார்கள்" என்று கூறினார்.

விழாவில் மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட் னாவிசின் மனைவி அம்ருதா, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண் டேவின் மகனும் மக்களவை உறுப்பினருமான சிறீகாந்த் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண்களின் கவுரவத்தையும் கண்ணியத்தையும் கெடுக்கும் வகையில் அநாகரீகமாக பேசிய சாமியார் பாபா ராம்தேவ் கருத் துக்கு எதிராக மகளிர் ஆணை யத்துக்கு புகார் வந்துள்ளது. எனவே, மகாராட்டிரா மாநில மகளிர் ஆணையம், 1993 இன் பிரிவு 12 (2) மற்றும் 12 (3) இன் படி, பாபா ராம்தேவ் தனது   விளக்கத்தை மூன்று நாட் களுக் குள் ஆணைய அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சாகங்கர் ராம்தேவிற்கு தனது மின்னஞ்சலில் தெரிவித்துள் ளார்.

பெண்களுக்கு எதிராக சாமியார் ராம்தேவ் கூறிய ஆட்சேபகரமான கருத்துக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி  கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லி பெண் தொழிலாளர்கள் ராம்தேவின் ஒளிப்படத்திற்கு செருப்பால் மாலை அணிவித்தனர்.

மகாராட்டிர சட்டப் பேரவை துணைத் தலைவர் நீலம் கோர்ஹே இந்தக் கருத் துக்கு கண்டனம் தெரிவித்துள் ளார். “யோகா மூலம் நிதானம் மற்றும் ஆரோக்கியம் பற்றியெல் லாம் அவர் சமூகத்திற்குச் சொல்லும் அதே வேளையில், அவர் பெண் களிடம் இத்தகைய இழிவான அணுகுமுறையைக் கொண்டி ருக்கிறார், அது மிகவும் தவறானது. எல்லா ஆண்களும் பெண்களை இப்படி பார்ப்ப தில்லை. நம் நாட்டில் தங்களைத் தாங்களே குரு என்று சொல்லிக் கொள்ளும் பல ஆண்கள் இது போன்ற அநாகரீகமான கருத் துக்களை தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது,'' என்றார்.

அம்ருதாவும், அங்கிருந்த மற்ற பெண்களும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண் டும் என்று கோர்ஹே கூறினார். மகாராட்டிர காங்கிரஸ் தலை வர் சச்சின் சாவந்த் கூறுகையில், ராம்தேவின் உண்மையான மனநிலை அவரது அறிக்கை மூலம் அம்பலமானது என்றார்.

மேலும் "மகாராட்டிர துணை முதலமைச்சரின் மனைவி முன் பெண்கள் குறித்து சாமியார் ராம்தேவ் கூறியது அநாகரீகமானது மற்றும் கண் டனத்திற்குரியது. இந்த கருத் தால் அனைத்து பெண்களும் புண்பட்டுள்ளனர், சாமியார் ராம்தேவ்  நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!" என்று கூறியிருந்தார்.


No comments:

Post a Comment