குருவை பிரகலாதன் நினைவு ஊர்வலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

குருவை பிரகலாதன் நினைவு ஊர்வலம்

ஈரோடு, நவ.11  கடந்த 9.11.2022 புதன் முற்பகல் 11 மணியளவில் குருவரெட்டியூர் தந்தை பெரியார் சிலை அருகில் - சுயமரியாதைச் சுடரொளி குருவை ப.பிரகலாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு ஊர்வலம் அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. 

முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் கு.சிற்றரசு, நகர செயலாளர் கிருட்டிணமூர்த்தி, ப.அர்ச்சுனன் ஆகியோர் மாலை அணிவித்தனர். ஊர்வலத்தில் ஆசிரியர் பால சுப்பிரமணி, ப.சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருட் டிணன், மணிமாறன், கவுசிக், நவ்ராஜ், பென்சான்சன், ப. ஈசுவரி, ஜீவா, லோகநாதன், மணிகண்டன், தைரியமணி, சிவஞானம், பவானி அசோக்குமார், மற்றும் ஊர் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கடைவீதி வழியாகச் சென்று பெரியார் திடலில் நிறை வடைந்தது. ஊர்வலத்தில். இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி தோழர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment