யுஜிசி தலைவரை நீக்குக! எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

யுஜிசி தலைவரை நீக்குக! எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன்

 

சென்னை,நவ.21- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமா வளவன் எம்.பி. விடுத்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ள தாவது:   

"அரசமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26 ஆம் தேதி இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் ‘சிறந்த அரசன்’ ‘ஜாதி பஞ்சாயத்துகளும் அவற் றின் சனநாயக மரபுகளும்’ முத லான தலைப்புகளில் உரைகளை நிகழ்த்த ஏற்பாடு செய்யுமாறு மாநில ஆளுநர்களுக்குப் பல் கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது அரசமைப்புச் சட்டத் துக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்துக்கும் எதி ரானதாகும்.

ஆணவக் கொலைகளுக்கு ஜாதி பஞ்சாயத்துகளே காரணம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்ததோடு அவற்றைத் தடுப்ப தற்கு சட்ட மசோதா ஒன்றைத் தயாரிக்குமாறு இந்திய சட்ட ஆணையத்துக்கு ஆணையிட் டது. அதனடிப்படையில் ‘காப் பஞ்சாயத்து’ என வட இந்தியா விலும் ‘ஜாதிப் பஞ்சாயத்து ‘ என தமிழ்நாட்டிலும் அழைக்கப் படுகிற சட்டவிரோத கூட்டங் களைத் தடை செய்வதற்கும், ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் வகைசெய்யும் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றையும் சட்ட மசோதா ஒன்றையும் 2012 ஆம் ஆண்டு இந்திய சட்ட ஆணையம் ஒன்றிய அரசிடம் வழங்கியிருக் கிறது.

இந்த நிலையில் 'காப்' பஞ்சாயத்து என்னும் சட்ட விரோத வன்முறைக் கூட்டங்களை சன நாயக வடிவங்களாக சித்தரிப்பது வன்முறையையும் பயங்கரவாதத் தையும் ஊக்குவிக்கும் செயலாகும். உயர் கல்வி நிறுவனங்களில் பிற் போக்கு பயங்கரவாதக் கருத்தைப் பரப்ப முயற்சிக்கும் பல்கலைக் கழக மானிய குழுத் தலைவர் ஜெகதீஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.

அரசமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26 ஆம் தேதியில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் அரசியல் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பது தொடர்பான கருத் தரங்குகளை நடத்துமாறும், யுஜிசி தலைவர் சொன்னதுபோல் பிற்போக்கு நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காமல் தடுக்குமாறும் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கி றோம்.

மாநிலங்களில் உள்ள தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுகளின் முத லமைச்சர்களை அவமதிக்கும் விதமாக நேரடியாக ஆளுநர் களுக்குக் கடிதம் எழுதியிருப்பது மாநிலங்களில் நிலவும் உயர் கல்விச் சூழலை சீர்குலைப்பதற்கு மிகப்பெரிய சதித் திட்டம் தீட் டப்பட்டிருப்பதையே எடுத்துக் காட்டுகிறது. இதனைத் தமிழ் நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்பதைத் தெரிவித்துக் கொள் கிறோம்" என்று அவர் கூறி யுள்ளார்.


No comments:

Post a Comment