தமிழ்நாட்டுக்கு சட்ட வல்லுநர் குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

தமிழ்நாட்டுக்கு சட்ட வல்லுநர் குழு

சென்னை,நவ.9- தமிழ்நாடு அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதிக் கொள்கைகளை செயல்படுத்து வதற்கான சட்டத்தை இயற்ற வல்லுநர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி கொள்கைகளை செயல்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்வாக சட்ட நிபுணர்கள், மூத்த வழக் குரைஞர்கள்கொண்ட சட்ட வல்லுநர் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவில் உச்ச நீதிமன்ற மாநில அரசு கூடுதல் வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி, மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்குரைஞர் அ.அருள்மொழி, வழக்குரைஞர் வி.லட்சுமிநாராயணன், சட்ட விவகாரங்கள் துறையின் அரசு செயலாளர் கார்த்திகேயன், சட்ட இயற்றுதல் துறையின் செயலாளர் கோபி ரவிக்குமார், சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் முனைவர் சுப.வீர பாண்டியன், தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தில் வழக்குரைஞர் வி.என்.வி. நிறைமதி, மூத்த வழக்குரைஞர் டாக்டர்.ரவிவர்மகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

No comments:

Post a Comment