பார்ப்பன பத்திரிகா தர்மம் என்பது இதுதானோ? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

பார்ப்பன பத்திரிகா தர்மம் என்பது இதுதானோ?

தீக்குளித்த தீரர், 85 வயது முதியவர், தாழையூர் தங்கவேலு என்ற தி.மு.க. செயல் வீரர் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக உள்ள உணர்வுகளைக் காட்ட தனது உடலில் தீ வைத்துக்கொண்டு தீக்குளித்தார்!

‘‘அச்செயல் ஊக்குவிக்கக் கூடிய செயல் அன்று; உயிர்த் தியாகம் வேண்டாம்; சட்டப் போராட்டம் முதல் பலமுனைகள் - வழிகள் உள்ளன. அதுபோன்ற முடிவுக்கு யாரும் வராதீர்கள்'' என்று நமது முதலமைச்சர் உருக்கமான வேண்டுகோள் விடுத்து அந்தத் தியாகச் செம்மலுக்கு வீர வணக்கம் கூறியது நாடறிந்த செய்தி.

அவர் தீக்குளித்த செய்தியை வெளியிட்டுள்ள ஆங்கில ஹிந்து நாளேடு (டில்லி - சென்னை பதிப்பு களில்) எப்படி அந்தச் செய்தியை வெளியிட்டு, பத்திரிகை ‘விஷய தானமாக' அல்ல ‘விஷம தானமாக' வெளியிட்டுள்ளது என்பதைப் பாருங்கள்.

“Assistance for overcoming suicidal thoughts is available on the State’s health helpline 104,Tele-MANAS 14416, and Sneha’s Suicide Prevention Helpline 044-24640050.”

மனநலம் குன்றியா அவர் தீக்குளித்தார்!

இது மனச்சாட்சியை விற்ற பச்சைப் பூணூல் தனமல்லவா?

இதற்கு எதிராக உணர்வுள்ள மொழிப் பற்றாளர்களின் கண்டனங்கள் பாயவேண்டாமா?

No comments:

Post a Comment