தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆவது பிறந்த நாள் விழா: கழகப் பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆவது பிறந்த நாள் விழா: கழகப் பிரச்சாரக் கூட்டம்

சாத்தூர், நவ.16 சாத்தூர் மய்யச் சாலை, வடக்குத் தேர் வீதி சந்திப்பில், 11.11.2022 வெள்ளி மாலை 6 மணியளவில், திராவிடர் கழகம் சார்பில், கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. 

நகர் மன்றத் துணைத் தலைவரும், மாவட்ட ப.க. அமைப்பாளருமான பா.அசோக் தலைமையில், மாவட்ட கழக செயலாளர் விடுதலை தி.ஆதவன் முன்னிலையில், மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர் அனைவரையும் வரவேற்றார். சாத்தூர் முன்னாள் நகர கழக செயலாளர் அ.செல்வம், அருப்புக்கோட்டை நகர தி.க. செயலாளர் பா.இராசேந்திரன், நகர தி.மு.க. செயலாளரும் நகர் மன்றத் தலைவருமான ச.குருசாமி, மாநில ப.க. துணைத் தலைவர் கா.நல்லதம்பி ஆகியோர் உரையாற்றினர். 

திராவிட மகளிர் பாசறை மாநில அமைப் பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டறம், நீட் தேர்வு எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, ‘திராவிட மாடல்' ஆட்சி யின் சிறப்புகளை விளக்கி நிறைவுரையாற் றினார். 

சி.பி.அய். மாவட்டப் பொறுப்பாளர் தோழர் பழனிக்குமார், நகர தி.மு.க. இளை ஞரணி துணை அமைப்பாளர் தோழர் அப்பாஸ், அருப்புக்கோட்டை முத்துக்குமார் மற்றும் தோழர்கள் பொது மக்கள் பெரு மளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். 

திராவிட மாணவர் கழகத் தோழர் அ.அன்புமணிமாறன் நன்றி கூற விழா நிறைவுற்றது.

No comments:

Post a Comment