ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஓட்டுநர், இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத் தம் 8 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.12.2022க்குள் விண்ணப் பித்துக் கொள்ளுங்கள்.

ஓட்டுநர் காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊதியம் : ரூ.19,500 - 62,000 இரவுக் காவலர் காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : எழுதப் படிக்க தெரிந் திருக்க வேண்டும். வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 15,700 - 50,000தேர்வு செய் யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட இணையதளப் பக்கங்களில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத் தினை அச்செடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத் தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஓட்டுநர்,  இரவுக் காவலர்,  முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு), கோவை - 641018

விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 05.12.2022 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவ ரங்கள் அறிய  https://cdn.s3waas.gov.in  என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment