நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி. நவ.11 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள் ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதி மன்றம்  உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்பட 6 பேர் சிறையில் உள்ளனர்.  கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் நளினி பரோல் விடுப்பில் வெளியே உள்ளார். இந்நிலை யில் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள் ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தர விட்டுள்ளது. 

பேரறிவாளனை கடந்த மே மாதம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது குறிப் பிடத்தக்கது. 

பேரறிவாளன் விடுதலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன்  உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.


No comments:

Post a Comment