Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
2035க்குள் விண்வெளி நிலையத்தை அமைக்க இஸ்ரோ திட்டம்
November 03, 2022 • Viduthalai

2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது.

புவிவட்டப்பாதைக்கு அதிக எடை யுள்ள செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட மறுபயன் பாட்டு ராக்கெட்டை துறைசார்ந்த நிறு வனங்களுடன் சேர்ந்து உருவாக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம் (இஸ்ரோ) முயற்சி மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார்.NGLV  என அழைக்கப்படும் அடுத்த தலை முறை ஏவுகணை வாகன ராக்கெட்டின் வடிவமைப்பில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், இதில் இஸ்ரோவுடன் ஒத்துழைக்க தொழில்துறையின் முன்வந்துள்ளதா கவும் அவர் கூறியுள்ளார்.

“வளர்ச்சித் திட்டங்களில் தொழில் துறையினரின் ஈடுபடுத்துவதே இதன் நோக்கம். இதன் மூலம் இதற்கான முத லீட்டை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம் அனைவருக்குமான வளர்ச்சிக்குத் தேவையான ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்க தொழில் துறையினர் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று சோமநாத் பிடிஅய் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். புவியின் குறைந்த சுற்றுப் பாதைக்கு 20 டன் எடையும் ஜியோஸ் டேஷனரி டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டில் (GTO)  பாதைக்கு 10 டன் எடையும் சுமந்து செல்லக் கூடிய ராக்கெட்டை வடிவமைக்க திட்டிமிடப்பட்டுள்ளது என்றார்.மற்றொரு இஸ்ரோ அதிகாரி கூறுகையில், 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ள தால், ஆழமான விண்வெளி பயணங் கள், மனித விண்வெளி விமானங்கள், சரக்குப் பயணங்கள் மற்றும் பல தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் சுற்றுவட்டப்பாதையில் வைப் பது போன்றவற்றையும் கண்காணித்து வருவதால் புதிய ராக்கெட் உதவியாக இருக்கும் என்றார். NGLV ஆனது, விண்வெளிப் போக்குவரத்தை அதிக செலவு குறைந்ததாக மாற்றும், மொத்த உற்பத்திக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு எளிய, வலுவான இயந்திரமாகக் கருதப் படுகிறது.

இஸ்ரோ  NGLV இன் வடிவமைப்பை ஒரு வருடத்திற்குள் தயார் செய்து அதை உற்பத்திக்காக தொழில்துறைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது, முதல் ஏவுதல் 2030 இல் தற்காலிகமாக திட்டமிடப் பட்டுள்ளது. NGLV  என்பது மீத்தேன் மற்றும் திரவ ஆக்சிஜன் அல்லது மண் ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்சிஜன் போன்ற இயற்கை எரிபொருள் கலவை களால் இயக்கப்படும் மூன்று-நிலை ராக்கெட்டாக இருக்கலாம். மறுபயன் பாட்டு NGLV  ராக்கெட் மூலம் ஒரு கிலோ சுமந்து செல்ல இந்திய ரூபாயில் சுமார் 1.5 லட்சம் செலவாகும் (1900 USD) என்று சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் சோம்நாத் கூறியிருந் தார்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாத முதல் 10 நாடுகள்!
February 16, 2022 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn