ஈரோடு மாவட்டம் பவானி - குமாரபாளையத்தில் பெரியார் 1000 வினா-விடை பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

ஈரோடு மாவட்டம் பவானி - குமாரபாளையத்தில் பெரியார் 1000 வினா-விடை பரிசளிப்பு

ஈரோடு மாவட்டம் - பவானி நகரவை நடுநிலைப்பள்ளி - பெரியார் 1000 வினா - விடைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், மயிலம்பாடி அரசு மேனிலைப்பள்ளியில் வெற்றிபெற்றமாணவர்களுக்கும் பரிசு புத்தகம்- பதக்கம், பணம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. பள்ளிகளுக்கு நினைவுக் கேடயமும் - தந்தைபெரியார் படமும் வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர், பேராசிரியர் ப.காளிமுத்து, அமைப்புச்செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

பவானி - குமாரபாளையம் ஏ.வி.எஸ். மெட்ரிக் பள்ளியில் 17.11.2022 அன்று பெரியார் 1000 வினா - விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகம் பரிசு, பதக்கம் அளித்துச் சிறப்பு செய்யப்பட்டது. தந்தை பெரியார் படமும், கேடயமும் பள்ளிக்கு வழங்கப்பட்டது. பள்ளியின் முதல்வர், பேராசிரியர் ப.காளிமுத்து , அமைப்புச்செயலாளர் ஈரோடு த.சண்முகம், மண்டல செயலாளர் இரா.நற்குணன், குமாரபாளையம் நகர செயலாளர் சரவணன், பவானி ஒன்றிய செயலாளர் அசோக் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment