குடந்தை (கழக)மாவட்டம்- பாபநாசம் ஒன்றியம்- பாபநாசத்தில் “பெரியார் 1000'' வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

குடந்தை (கழக)மாவட்டம்- பாபநாசம் ஒன்றியம்- பாபநாசத்தில் “பெரியார் 1000'' வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

பாபநாசம், நவ.24 குடந்தை கழக மாவட்டம்- பாபநாசம் ஒன்றியம்- பாபநாசத்தில் இயங்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் “பெரியார் 1000'' வினா-விடைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவி களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் சான்றி தழ்களும் வழங்குகின்ற நிகழ்ச்சி 18. 11. 2022 அன்று காலை பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.

நிகழ்ச்சியில், முதல் பரிசு பெற்ற மாணவி பி.தர்சினியை தஞ்சை மண்டல செயலாளர் குடந்தை க.குருசாமி பதக்கங்களையும் சான் றிதழையும் வழங்கி பாராட்டினார். இரண்டாம் பரிசு பெற்ற எஸ்.அகல்யாவிற்கு குடந்தை மாவட்ட கழக செயலாளர் உள்ளிக்கடை துரைராசு பதக்கம், சான்றிதழ் வழங்கினார். மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற மாணவி கே.முத்தமிழிற்கு குடந்தை மாவட்ட பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் க.ஞான சம்பந்தம் பதக்கம், பரிசு வழங்கினார். மூன் றாவது பரிசு பெற்ற கே.அஞ்சலிக்கு பாபநாசம் ஒன்றிய திராவிட கழக செயலாளர் கபித்தலம் சு.கலியமூர்த்தி  பதக்கங்களையும், சான்றி தழ்களையும் வழங்கினார்.தலைமை ஆசிரி யரிடம் தந்தை பெரியார் படம் வழங்கப் பட்டது. 

1200 மாணவர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியாரின் சாதனைகள் போன்ற பல்வேறு செயல் திட்டங்கள் குறித்து உரை நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு தேர்வு எழுதிய அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment