கன்னியாகுமரி, நவ.13 கன்னியாகுமரியை அடுத்த கோவளம் புனித இக்னேசியஸ் உயர்நிலைப் பள்ளியில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் -பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பாக பெரியார் 1000 வினா - விடைப் போட்டி நடந்தது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கும் விழா அந்த பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட கழகத் தலைவர் மா.மு சுப்பிரமணியம் தலைமை தாங்கி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் குமாரதாஸ், முன்னிலை வகித்தார். கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் விழாவினை ஒருங்கிணைத்து மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை திராவிடர் கழக கன்னியாகுமரி கிளை அமைப்பாளர் க.யுவான்ஸ் செய்திருந்தார். ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளாக மாவட்ட கழகம் சார்பாக பரிசுத் தொகையுடன், பெரியாருடைய நூல்களும் வழங்கப்பட்டன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளிகளுக்கு பெரியார் படங்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment