சென்னை, நவ.13 இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்படும் சட்ட மன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில் கீழ்க்கண்ட கருத்துகளைப் பதிவு செய்கிறோம்.
1. நால்வருண முறைப்படி அமைந் துள்ள ஏற்றத்தாழ்வான ஜாதிய சமூக அமைப்பில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சமூக நீதி கோட்பாடு நீண்ட நெடுங் காலமாக அமலாக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சமூக நீதி என்ற அடிப் படையில் இடஒதுக்கீடு கோட்பாடு நூறாண்டுகளுக்கும் மேலாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. சாதிய ஏற்றத் தாழ்வுகள் நீடிக்கும் வரை சமூக அடிப் படையிலான இடஒதுக்கீடு கோட்பாடு நீடிக்க வேண்டுமென தொடர்ந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி வருகிறது. சமூக அடிப்படையில் வழங் கப்படும் கோட்பாட்டை ரத்து செய்து விட்டு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டு மென்ற கோரிக்கை பலரால் நாட்டின் பல பகுதியில் எழுப்பப்பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளு மன்றத்திலும், பல்வேறு மாநில சட்ட மன்றங்களிலும் இதனை எதிர்த்து குரல் கொடுத்ததோடு சமூக அடிப்படையி லான இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டுமென வற்புறுத்தி வருகிறது.
2. இந்தியாவின் பல மாநிலங் களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவின ருக்கான இடஒதுக்கீடு பல அளவீடு களில் அமலாக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு வருகிறது. மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 95 சதவிகிதமான மக்கள் இடஒதுக்கீடு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள் ளனர். ஆனால், பல மாநிலங்களில் 50 முதல் 70 சதவிகித மக்களே இடஒதுக்கீடு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள் ளனர். மீதமுள்ள குறிப்பிட்ட சதவிகித மான மக்களுக்கு இடஒதுக்கீடு வழங் கப்படாத நிலையே தொடர்ந்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கும் இட ஒதுக் கீடு வேண்டுமென நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொந்தளிப்பான போராட் டங்கள் வெடித்த சூழ்நிலையில் உழைப் பாளி வர்க்கத்தின் ஒற்றுமையை பேணிக்காக்கும் வகையில் இதுவரை யில் இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரி வினரில் ஏழைகளுக்கு குறிப்பிட்ட சதவிகித இடஒதுக்கீடு வழங்கிட வேண் டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1990 ஆம் ஆண்டு முதல் கோரி வந் துள்ளது. அதேசமயம், முன்னேறிய பிரிவினருக்கு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க கூடாது என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.
3. பொருளாதாரத்தில் நலிந்த இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவின ருக்கு அதிகபட்சம் 10 சசதவிகிதம் வரை இடஒதுக்கீடு வழங்கும் 103 ஆவது சட்டத் திருத்தத்தினை ஒன்றிய பாஜக அரசு 2019ம் ஆண்டு நிறைவேற்றியது. இச்சட்டத்திருத்தத்தினை நாடாளுமன் றத்தில் ஆதரித்த அதே நேரத்தில், இதனை நிறைவேற்றுவதற்கு முன் அனைத்துக் கட்சிகளோடு கலந்து பேசி கருத்தொற்றுமையோடு நிறைவேற்று வதற்கு மாறாக அவசர கதியில் அரசியல் ஆதாய நோக்கோடு ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியதை நாடாளு மன்றத்தில் இம்மசோதா விவாதத்திற்கு வந்த போதே எங்கள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த சலுகை களைப் பெறுவதற்கு பாஜக ஒன்றிய அரசு பணக்காரர்களுக்கு சேவகம் செய் யும் நோக்கோடு வருமான வரம்பினை தீர்மானித்து ஏழைகளை வஞ்சித்துள் ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள் ளோம்.
4.நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப் பட்ட பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரி வினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் 103 ஆவது சட்டத் திருத் தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. பெரும் பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப் படையில் மேற்கண்ட சட்டத்திருத்தம் செல்லத்தக்கதாகியுள்ளது.
5. மேற்கண்ட தீர்ப்பினை வழங் கியுள்ள உச்சநீதிமன்றம் பொருளாதாரத் தில் நலிவுற்றவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை பெறுவதற்கு ஒன்றிய பாஜக அரசு தீர்மானித்து ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம், அதிகபட்சம் 5 ஏக்கர் நிலம், ஆயிரம் சதுரஅடி அளவில் குடியிருப்பு மனை மற்றும் 900 சதுர அடி அளவிற்கு குடியிருப்பு வீடு என்ற வரம்பினை மாற் றியமைக்க தவறியுள்ளது. மேற்கண்ட வருமான வரம்பின் மூலம் பொருளா தாரத்தில் நலிவுற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு என்ற நோக்கத்தையே ஒன்றிய பாஜக அரசு பாழடித்துள்ளது. இதன் மூலம் ஏழைகளிலும் ஏழைகளாக இருப் போர்களுக்கு எதிரான பாகுபாடு மேலும் தீவிரமடைந்துள்ளது. பணம் படைத்தவர்களுக்கான இடஒதுக்கீடாக இது மாற்றப்பட்டுள்ளதானது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை மறுபரிசீலனை செய்ய வற் புறுத்த வேண்டிய தேவையுள்ளது என் பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
6. நாடாளுமன்றத்தில் மேற் கொள்ளப்பட்ட 103 ஆவது சட்டத் திருத்தத்தின்படி இடஒதுக்கீட்டு வரம் புக்குள் வராத நலிந்த பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதவிகிதம் வரை (Subject to a Maximum of 10 percent) இடஒதுக்கீடு வழங்க வேண் டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இப்பிரிவினருக்கு 10 சத விகித இடஒதுக்கீடு கட்டாயமாக வழங்க வேண்டுமென குறிப்பிடப்படவில்லை. எனவே, தமிழ்நாட்டில் இப்பிரிவினருக்கு 10 சதவிகித அளவிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய சட்டரீதியான நிர்ப் பந்தம் ஏதும் இல்லை என்பதை தெரி வித்துக் கொள்கிறோம்.
7. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிகாரப்பூர்வமற்ற தக வலின்படி 95 சதவிகிதமான மக்கள் இட ஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகிதம் மட்டுமே இடஒதுக்கீடு வரம்பிற்குள் இடம்பெறவில்லை என விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்பிரிவு 5 சதவிகித மான மக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும். எனவே, தமிழ்நாட்டில் இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகை யினை கணக்கீடு செய்வதற்கும், அவர் களின் எண்ணிக்கையின் அடிப்படை யில் அளிக்க வேண்டிய இடஒதுக்கீட்டு அளவினை தீர்மானிக்கவும், இச்சலுகை பெறுவதற்கான வருமான வரம்பை சிபாரிசு செய்வதற்காக ஒரு ஆணையம் அமைக்க வேண்டுமெனவும், அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் அடிப் படையில் செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
இப்படிக்கு,
நாகை மாலி, சட்டமன்ற உறுப்பினர்
தலைவர், சிபிஅய் (எம்) சட்டமன்றக்குழு
எம். சின்னதுரை, சட்டமன்ற உறுப்பினர்
துணைத் தலைவர், சிபிஅய் (எம்) சட்டமன்றக்குழு

No comments:
Post a Comment