செய்யாறு: ‘பெரியார் 1000 வினா-விடைப் போட்டி'யில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

செய்யாறு: ‘பெரியார் 1000 வினா-விடைப் போட்டி'யில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கல்

செய்யாறு, நவ. 12 தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, செய்யாறு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது.

ஆண், பெண் இருபாலரும் 6 ஆம் வகுப்புமுதல் 10 ஆம் வகுப்புவரை இப்போட்டியில் பங்கேற்றனர். பெரியார் பெருந் தொண்டர் மறைந்த டி.பி.திருச்சிற்றம்பலம் அவர்களால் தொடங்கப்பட்ட படிகலிங்கம் அறக்கட்டளை மூலமாக இந்த ஆண்டும் பரிசுகள் வழங்கி, மாணவ, மாணவியரைப் பாராட்டினர்.

அறக்கட்டளையின் தற்போதைய தலைவரான, திருச்சிற்றம்பலம் அவர்களின் மூத்த மகன் டி.மணி மற்றும் டி.காமராஜ், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த வி.என். கோவிந்தன், மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் ஆகி யோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.

மேலும், பெரியார் 1000 வினா விடைப் போட்டியில் பங்கு பெற்று, முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கும், கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

குறிப்பாக செய்யாறு கழக மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங் களைப் பெற்ற  இந்தோ - அமெரிக்கன் மேல் நிலைப்பள்ளி ஒட்டுமொத்த பரிசினையும் வென்றது. அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.




No comments:

Post a Comment