சென்னை, அக்.17 விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு சமீபத்தில் குடியரசுத்தலைவரிடம் அளித்துள்ள அறிக்கையின் விவரங்கள் வெளியே தெரியவந்து, ஹிந்தி பேசாத மாநில மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பே அறிக்கையின் விவரம் வெளி யானது நாடாளுமன்ற விதிகளுக்கு புறம்பானதாகும். எனவே அந்த அறிக் கையை திரும்பப்பெற வேண்டும். அத் துடன், அக்குழுவின் தலைவர் பொறுப்பு வகிக்கும் அமித்ஷா, தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை மோசமாகிக் கொண்டிருக்கும் சூழலில் அதைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் பட்டினியால் வாடுவோர் அதிகம் உள்ள நாடு என்னும் அவப்பெயரை இந்தியாவுக்கு உருவாக்கி இருக்கும் பா.ஜ.க. அரசு, மொழி அடிப் படையிலான இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Monday, October 17, 2022
அமித்ஷா பதவி விலகுக! தொல். திருமாவளவன்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment