இராமேசுவரம்,அக்.10- இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 600 விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட மீனவர்கள் 8.10.2022 அன்று கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்ததுடன் தங்க ளது ரோந்துப் படகு மூலம் இராமேசுவரம் மீனவர்களின் படகு மீது மோதி விரட்டி யடித்தனர். இதில் படகின் பக்கவாட்டில் சேதமடைந் தது. இதனால், அச்சமடைந்த மீனவர்கள் மீன் பிடிக்கா மலேயே ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.
இதுகுறித்து இராமேசு வரத்தில் மீனவர்கள் கூறும் போது, இலங்கை கடற்படையினரின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த ஒன்றிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இலங்கை கடற் படையினர் விரட்டியடித்த நிகழ்வு குறித்து மீன்வளத் துறை மற்றும் கடலோரக் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment