வரும் 11ஆம் தேதி சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. குமரி மாவட்டத்திலும் 3 இடங்களில் நடைபெற உள்ளது. அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலகத்தில் நடைபெற்றது. திராவிடர்கழகம் சார்பாக குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஸ் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் பெல்லார்மின் , காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் மருத்துவர் பினுலால் சிங் ,விசிக பகலவன், ஜெயன், மதிமுக வெற்றி வேல் மற்றும் தோழமை கட்சிகள் அமைப்புகள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். குமரிமாவட்டத்தில் 11ஆம்தேதி நாகர்கோவில் வடசேரி, தக்கலை, குழித்துறை ஆகிய 3 இடங்களில் வெகு சிறப்பாக மனிதச்சங்கிலி நடைபெற வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Sunday, October 9, 2022
சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி - ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment