போக்குவரத்து பணிமனைகளில் தொழிலாளர்கள் கடைப்பிடிக்கவேண்டியவை: போக்குவரத்துத்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

போக்குவரத்து பணிமனைகளில் தொழிலாளர்கள் கடைப்பிடிக்கவேண்டியவை: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை,அக்.28- தமிழ் நாடு அரசின் போக்குவரத் துத்துறை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

‘மாநகர போக்குவரத் துக் கழக பணியாளர்கள் பணிமனைகளில் பாது காப்புடன் பணிபுரிய கீழ்க்கண்ட நடைமுறை களை பின்பற்றக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பணிமனையின் நுழைவு வாயிலிலிருந்து தாங்கள் செல்லும் பிரிவிற்கு ஓரமாகவும், பாது காப்பாகவும் சென்றிட வரையறுக்கப்பட்ட பகுதியில் நடந்து செல்ல வேண்டும்.

இருசக்கர வாகனங் களை எக்காரணம் கொண் டும் வாகனம் நிறுத்தும் இடம் தவிர மற்ற பகுதி களில் நிறுத்தவும் கூடாது, இயக்கிச் செல்லவும் கூடாது.

பணிமனையின் உள்ளே வரும் பேருந்து கள் நுழைவு வாயிலில் இருந்து பணிமனைக்குள் வரும்போது, பணியாளர் களின் பாதுகாப்பிற்காக கண்டிப்பாக 5 கிலோ மீட்டர் வேகத்தில் மட் டுமே இயக்கப்பட வேண் டும். இதற்காக பணிமனை யின் நுழைவு வாயில் மற் றும் பணிமனை  பகுதி களில் 5 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே என்கிற விளம்பரப் பலகையை பொருத்திட வேண்டும்.

தொழில்நுட்பப் பணி யாளர்கள் பணி நேரத்தில் உரிய காலணிகள் அணிந்து பணியாற்றுவதால் கால் களில் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்புடன் பணிபுரியலாம்.

தொழில்நுட்பப் பணி யாளர்கள் வெல்டிங் பணி செய்யும் போது கண்க ளில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்திட பாதுகாப்பு கண்ணாடி   அணிந்து பணியாற்றிட வேண்டும்.

வெல்டிங் பணியின் போது அருகில் பெயிண்ட் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய எவ்வித பொருட் களோ, திரவமோ இல்லா மல் அகற்றிவிட்டு பாது காப்புடன் பணி செய்திட வேண்டும்.

பேருந்திற்குள் வெல் டிங் பணி செய்திடும் போது கண்டிப்பாக பேட்டரி இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பகல் பொழுதில் பேருந்துகள் தொழில் நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் இயக் கப்படும் போது ஓட்டுநர் உரிமம் இல்லாத (பிமீணீஸ்ஹ்) எந்த ஒரு பணியாளரும் பேருந்தினை இயக்கக் கூடாது.

பேருந்தினை பணி மனையின் உள்ளே வேறு இடம் மாற்றி நிறுத்த வேண்டி இருப்பின், மேற் பார்வையாளரின் அனு மதியுடன் ஓட்டுநர் உரி மம் (Heavy Licence) உள்ள மாநகர போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பணியா ளர்களை அல்லது  பணி மனை ஓட்டுநர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பேருந்தினை பின் னோக்கி இயக்க வேண் டிய சூழலில் கண்டிப்பாக மற்றொரு பணியாளர் உதவியாளராக பணி செய்திட வேண்டும் என் பதனை உறுதிப் படுத்திட வேண்டும். -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment