இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், அக்.30- இலங்கை கடற்படையை கண்டித்து, ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 26-ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு மற்றும் 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையி னர் கைது செய்து யாழ்ப் பாணம் சிறையில் அடைத் தனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து நேற்று (29.10.2022) ராமேசுவரம் தங்கச்சிமடம் அருகே வலசை பேருந்து நிறுத்தம் எதிரே அனைத்து விசைப் படகு மீனவர்கள் சார் பாக கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சகாயம் தலைமை தாங்கினார். மீனவர் சங்க நிர்வாகிகள் சேசூராஜா, எமரிட் மற்றும் ஏராளமான மீன வர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். 

இலங்கை சிறையில் தவிக்கும் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் பட குகளை விடுவிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்டு கொண்டுவர வேண் டும். பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற் படையினர் தொந்தரவு இல்லாமல் தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டம் நடந்தது. 

இந்த போராட்டத் தால் ராமேசுவரம் விசைப்படகு மீன வர்கள் நேற்று 2-ஆவது நாளாக மீன்பிடிக்க செல் லாமல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர்

No comments:

Post a Comment