சென்னை, அக்.5 செயற்கை கருத்தரிப்பு மய்யங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படி, கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மய்யம், கருதரிப்பு மய்யங்கள், வாடகை தாய் மய்யம் என நான்கு வகை மருத்துவ மய்யங்களாக பிரிக்கப்பட்டு பதிவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்த 50 ஆயிரம் ரூபாயும், வாடகை தாய் மய்யத்துக்கு இரண்டு லட்சம் ரூபாயும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பதிவுக் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம் எனவும், இதன் மூலம் போலி கருத்தரிப்பு மய்யங்கள் செயல்படாமல் தடுக்க முடியும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment