சென்னை,அக்.5- தமிழ்நாட்டில் நேற்று (4.10.2022) ஆண்கள் 256, பெண்கள் 187 என மொத்தம் 443 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 95 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 85,006 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 41,703 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 526 பேர் குணமடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் 5,256 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 461 ஆகவும், சென்னையில் 97 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தியாவில் நாடு முழுவதும் புதிதாக 1,968 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.