தி.மு.க. தலைவராக இரண்டாம் முறையாக ஒருமனதாக இன்று (9.10.2022) தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகநீதிக்கான சரித்திர நாயகர் - தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னைப் பெரியார் திடலுக்கு வருகை தந்தார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச் செய லாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் அய். பெரியசாமி, முனைவர் க. பொன்முடி, ஆ. இராசா, அந்தியூர் செல்வராசு, கவிஞர் கனிமொழி ஆகியோர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங் களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை போர்த்தி, இயக்க நூல்களையும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தி.மு.க. தலைவர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிடர் கழகத் தலைவருக்கு பொன் னாடை அணிவித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, ஆகியோரும் கழகத் தலைவருக்கு சால்வை அணிவித்தனர்.
தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு துணைப் பொதுச் செயலாளர்கள் அய்.பெரியசாமி, முனைவர் க. பொன்முடி, ஆ. இராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர்களுக்குக் கழகத் தலைவர் இயக்க நூல்களை அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞரணி தலைவர் த. வீரசேகரன் ஆகியோரும் புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment