வாலாஜாபாத், அக். 18- காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நகரில், 13.10.2022 வியாழக் கிழமை மாலை 5.30 மணியள வில், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வள்ளல் காமராசர் நினைவு நாள் ஆகியவற்றை இணைத்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.
வாலாஜாபாத் ஒன்றிய அமைப்பாளர் சீத்தாவரம் ஆ. மோகன் தலைமை வகித்து உரையாற்றினார். காஞ்சி மாந கர கழகத் தலைவர் கி.இளைய வேள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். காஞ்சி மாவட்ட அமைப்பாளர்
செ. ரா.முகிலன் முன்னிலை வகித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட கழக இணை செயலாளர் அ.வெ. முரளி, வட்டார காங்கிரஸ் தலைவர் ஏ. சிவக்குமார், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாசறை அ.செல்வராஜ், மதிமுக மாவட்ட அவைத்தலைவர் ஜி.கருணாக ரன், அறிவு வளர்ச்சி மன்றத் தின் அமைப்பாளர் நாத்திகம் நாகராஜன், காஞ்சி மண்டல கழக செயலாளர் முனைவர் பா. கதிரவன் ஆகியோர் உரை யாற்றினர்.
கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல் வன் சிறப்புரையாற்றினார்.
தந்தை பெரியார் அவர் களின் பகுத்தறிவு, சமூகநீதி, மனிதநேயச் செயற்பாடுகள், அறிஞர் அண்ணா அவர்களின் அளப்பரிய சாதனைகள், கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் சிறப்பான சாதனைகள், பெரியாருடன் காமராசர் அண்ணா ஆகியோரின் தொடர்பு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் செயற் பாடுகள், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர் களின் திராவிட மாடல் ஆட்சி யின் சாதனைகள், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி இவற்றின் பாசி சக் கோட்பாடுகள் முதலிய வற்றை விளக்கி மிகவும் சிறப் பான வகையில் உணர்ச்சி பூர்வமாக உரையாற்றினார்.
இறுதியாக கழகத் தோழர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.
செங்கை இளைஞரணி அமைப்பாளர் தம்மனூர் மு. அருண்குமார், காஞ்சி மாநகர கழகச் செயலாளர் ச. வேலா யுதம், தொழிலதிபர் மதி வாணன், களியப்பேட்டை தமிழ்மணி, மு. டில்லி பாபு, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் செல்வம், தோழியர் ரேவதி, தோழர் ரவி பாரதி ஆகியோரும் திமுக பழவேரி மாலிக் பாட்சா, மதிமுக பேரூராட்சி செயலாளர் எஸ். சிவக்குமார், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் பேரூராட்சி செயலாளர் த. அசோக்குமார், ஆர். அரிதாஸ், நகர் காங்கிரஸ் தலைவர் எஸ். சுரேஷ் உள் ளிட்ட ஏராளமான தோழர் களும் பொதுமக்களும் கூட் டத்தில் பங்கேற்றனர்.
கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட கழக இணைச் செயலாளர் அ. வெ. முரளி, வாலாஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் சீத்தாவரம் ஆ. மோகன் முன்னின்று நடத்தி னர்.
No comments:
Post a Comment