புதுடில்லி, அக்.14 நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. தற்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு விசா ரணைக்கு உகந்தது என்று உத்தர விட்டது. தமிழ்நாடு அரசு மேலும் சில தகவல்களை சேகரிக்க வேண்டி இருப்பதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது, இதனை அடுத்து நீட் தொடர்பான தமிழ்நாடு அரசின் மனு தொடர்பான விசாரணையை தள்ளிவைத்து உச்சநீதி மன்றம் உத்தர விட்டது.
Friday, October 14, 2022
'நீட்' தேர்வு : தமிழ்நாடு அரசின் எதிர் மனு விசாரணை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment