கேரளாவில் பறவைக் காய்ச்சல் தமிழ்நாடு எல்லையில் வாகனங்கள் தணிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

கேரளாவில் பறவைக் காய்ச்சல் தமிழ்நாடு எல்லையில் வாகனங்கள் தணிக்கை

கோவை,அக்.29- பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக் கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகி றார்கள். இதையொட்டி அமராவதி அருகே எல்லைப்பகுதியில் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. 

தமிழ்நாடு -கேரள மாநிலத்தை இணைக்கும் வகையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழி யாக உடுமலையிலிருந்து மூணாறுக்கு சாலை அமைக்கப்பட்டு உள் ளது. அதில் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் உடுமலை வனத்துறையி னரும் சின்னார் சோத னைச்சாவடியில் அமரா வதி வனத்துறையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அது தவிர பழைய ஒன் பதாறு சோதனைச்சாவடி அருகே கால்நடை பரா மரிப்புத்துறை சார்பில் நோய் தடுப்பு சாவடியும் அமைக்கப்பட்டு உள் ளது. அசாதாரண சூழல் நிலவுகின்ற போது கால் நடை துறையினர் வாகன ஓட்டிகளுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்துவது டன் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக வாக னங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின் றனர். 

இந்த சூழலில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பாதிக் கப்பட்டு வாத்துகள் பலி யானதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் பற வைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. அதேபோன்று தமிழ் நாட்டுக்குள் எல்லைப் பகுதியில் நோய்தடுப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கேரளா வில் இருந்து தமிழகத் துக்குள் வருகின்ற வாக னங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள் ளது. இது குறித்து கால் நடைத்துறையினர் கூறிய தாவது:- 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஒன்ப தாறு சோதனைச்சாவடி யில் கால்நடை பராமரிப் புத்துறை மூலம் சோத னைச்சாவடி அமைக்கப் பட்டு கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரு கின்ற வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப் பட்டு வருகிறது. கால் நடை உதவி மருத்துவர், ஆய்வாளர் மற்றும் பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோழி மற்றும் முட்டை ஏற்றிக்கொண்டு வரு கின்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டு மின்றி பறவைக் காய்ச்சல் நோய் எதிரொலியாக உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் கண் காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. பண் ணைகளில் அசாதாரண முறையில் அதிக எண் ணிக்கையில் கோழிகள் பலியானால் அருகில் உள்ள கால்நடை நிலை யங்களில் தெரிவிக்க வேண் டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment