'ஹிந்தி மொழியை திணிக்கக்கூடாது'- மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

'ஹிந்தி மொழியை திணிக்கக்கூடாது'- மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்

பாளையங்கோட்டை, அக்.21 ஹிந்தி மொழியை திணிக்க கூடாது என்று நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருநெல் வேலி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து குழு கூட்டம் பாளையங் கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (20.10.2022) நடைபெற்றது.  மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங் கினார். துணைத் தலைவர் செல்வ லட்சுமி அமிதாப் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் கனகராஜ், பாஸ்கர், டேவிட் சாலமோன், லிங்கசாந்தி, ஜான்ஸ் ரூபா, தனித்தங்கம், அருண்தபசு, சத்யவாணிமுத்து, கிருஷ்ணவேணி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- ஹிந்தி மொழியை திணிக்க கூடாது ஹிந்தி மொழி பேச முடியாத மாநில மக்கள் மீது ஹிந்தி மொழியை திணிக்கும் வகையிலும், கல்வி, வேலை வாய்ப்பு போன்ற வற்றில் ஹிந்தி மொழி தெரிந்த மக்களுக்கு மட்டுமே சாதகமான வழிவகைகள் செய்யும் வகையிலும், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளுக்கும், அந்த மொழி களை பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் தலைமையிலான அலுவலர் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழுவால் கடந்த செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி குடியரசுத் தலைவரிடம் வழங்கப் பட்டுள்ள பரிந்துரைகளை அமல் படுத்தக்கூடாது, என்று நெல்லை மாவட்ட பஞ்சாயத்து குழு வலியு றுத்துகிறது.   நெல்லை மாவட்டத்தில் ரூ.3 கோடியே 51 லட்சத்துக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்ப ட்டது. மேலும் ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 50 உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மேலும் 50 உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இந்த கூட்டத்தில் ஹிந்தி திணிப்பை எதிர்த்து பதாகைகள் ஏந்தி,  உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினார்கள்

No comments:

Post a Comment