மேட்டூர், அக்.16 ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை வலுத்துள்ள தால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, அய்ந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அதேபோல், மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரிநீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment