தமிழ்நாட்டுக்கு காவிரியில் 530 டி.எம்.சி. தண்ணீர் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

தமிழ்நாட்டுக்கு காவிரியில் 530 டி.எம்.சி. தண்ணீர் திறப்பு

மண்டியா, அக்.25- கருநாடக மாநிலம் மண்டியா மாவட்டம் சிறீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. 

கருநாடகம் மற்றும் தமிழ்நாடு மக்களின் உயிர்நாடியாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் உள்ளது. இந்த நிலையில், குடகு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததுடன், அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்தும் விடப்பட்டு வந்தது. 3 முறை நிரம்பியது தொடர் கனமழை காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக கே.ஆர்.எஸ். அணை ஒரே ஆண்டில் 3 முறை நிரம்பி உள்ளது. அதாவது கடந்த ஜூலை, செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டி நிரம்பி உள்ளது. கடந்த 3 மாதங்களாக அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் இருப்பதால், அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது.

அந்த தண்ணீர் காவிரியில் பாய்ந்தோடி தமிழ் நாட்டின் மேட்டூர் அணையை சென்றடைகிறது. கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவுடன் இருப்பதால் கருநாடக மற்றும் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 530 டி.எம்.சி. தண்ணீர் திறப்பு நடப்பாண்டில் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதியில் இருந்து இதுவரை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் 530 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 48 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு-கருநாடகம் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் கருநாடகம், தமிழ்நாட்டுக்கு காவிரியில் 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், காவிரி மேம்பாட்டு ஆணையம் கருநாடக அணைகளில் நீர் இருப்பையும், தண்ணீர் திறக்கப் படுவதையும் கண்காணித்து வருகிறார்கள். பிரச்சினை எழாது கருநாடகம் ஒரு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், தற்போது நல்ல மழை பெய்து அணையில் போதுமான தண்ணீர் உள்ளதால், நடப்பாண்டில் இதுவரை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் (530 டி.எம்.சி.) திறக்கப்பட்டுள்ளது. இதனால் இருமாநிலங்கள் இடையே காவிரி நீர் பங்கீடு பிரச்சினை எழாது. விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


No comments:

Post a Comment