இந்தியாவில் புதிதாக 2756 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

இந்தியாவில் புதிதாக 2756 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

புதுடில்லி,அக்.10-  ஒன்றிய சுகாதாரத் துறை சார்பில் நேற்று (9.10.2022) வெளியிடப்பட்ட தகவலின் படி, நாடு முழுவதும் நேற்று முந்தைய நாள் (அக்.8) தொற்று பாதிப்பு சற்று அதி கரித்து 2,797 ஆனது. நேற்று (அக்.9) ஒரே நாளில் 2,756 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,756 பேருக்கு கரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,12,013 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (அக்.9) காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 29,251 லிருந்து 28,593 ஆக குறைந்துள்ளது. கரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கு கீழே வந்து விட்டது. நாடு முழுவதும் கரோனாவுக்கு மேலும் 21 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5,28,799 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா 342

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 342 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:  கடந்த 24 மணி நேரத்தில் 342 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 84 பேர், செங்கல்பட்டில் 29 பேர் உள்பட 34 மாவட்டங்களில் தொற்றுப் பாதிப்பு பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 319 பேர் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.   கரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தற்போது கரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 702 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment