சென்னை,அக்.15- சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்தை பொங்கல் விழாவுக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடர்பாக, நகர்ப்புற வளர்ச் சித் துறை அமைச்சர் சு.முத்து சாமி, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்றுமுன்தினம் (13.10.2022) ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களி டம் கூறியதாவது: மொத்தம் 88 ஏக்கர் பரப்பில், ரூ.315 கோடியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலை யப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இவற்றை விரைந்து முடிக்குமாறு, ஒவ் வொரு ஆய்வுக் கூட்டத்திலும் முதலமைச்சர் ஸ்டாலின் அறி வுறுத்துகிறார். இதுகுறித்து முத லமைச்சர் என்னிடம் கேட்ட போது, பிப்ரவரி மாதத்துக்குள் பணி முடிக்கப்படும் என்றேன். ஆனால், 60 நாட்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிவ டையும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். தற் போது 82 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே, பொங்கல் நாளுக்குள் பணி களை முடித்து, பேருந்து நிலை யத்தைத் திறப்பதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ளு மாறு அதிகாரிகளை அறிவுறுத் தியுள்ளோம்.
2,350 பேருந்துகள்
இங்கு 2,350 பேருந்துகள் வந்து, செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து நிலையத்துக்கு வாக னங்கள் வந்து செல்லும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படு வதைத் தடுக்கும் வகையில் பாலம் அமைக்க வேண்டும் எனபோக் குவரத்துத் துறை கோரியுள்ளது.
அந்தப் பணிகளை 3 மாதங் களுக்குள் தொடங்க நடவ டிக்கை எடுக்குமாறு அறிவுறுத் தியுள்ளோம். இதேபோல, அருகில் உள்ள ரயில் நிலை யத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வரு வோர், நேரடியாக பேருந்து நிலையம் வருவதற்கான ஏற் பாடுகள் செய்யப்படும். அனைத் துப் பணிகளும் முடி வடையும்போது, பேருந்து நிலையத்துக்குபயணிகள் சிரமமின்றி வந்துசெல்ல முடியும். அதேநேரம், பல்வேறு பகுதிகளுக்கு நகரப் பேருந் துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகள் ஆய்வில் உள்ளன. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
-இவ்வாறு அமைச்சர் கூறி னார். ஆய்வின்போது, செங்கல் பட்டு சட்டப்பேரவை உறுப் பினர் எம்.வரலட்சுமி, ஆட்சி யர் ராகுல் நாத், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment