ராஞ்சி, அக்.10 ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநி லங்களில் உள்ள பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு 21 வயதுக்கு முன்பே திரு மணம் செய்து வைக்கப் படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் கடந்த 2020-ஆம் ஆண்டு 84 லட்சம் பேரிடம் மாதிரி மக்கள் தொகை கணக் கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில் பெண்களின் திருமண வயது, கருத்தரிப்பு, இறப்பு உள்பட பல தகவல்கள் சேக ரிக்கப்பட்டன. இதன் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது: தேசிய அளவில் 18 வயதுக்கு முன்பே திருமணம் ஆகும் பெண்களின் சதவீதம் 1.9-ஆக உள்ளது. மிக அதிகள வாக ஜார்க்கண்ட் மாநிலத் தில் இதன் அளவு 5.8 சதவீத மாக உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் குழந்தை திரும ணங்களின் அளவு ஊரக பகுதிகளில் 7.3 சதவீதமாகவும், நகரங்களில் 3 சதவீதமாகவும் உள்ளன.
அதேபோல் குற்றச் சம்ப வங்களும் ஜார்க்கண்ட் மாநி லத்தில் அதிகளவில் இருப்ப தாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இங்கு பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கை களால் கடந்த 2020-ஆம் ஆண்டு 15 பேர் கொல்லப்பட் டதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. காதலிக்க மறுத்த சிறுமி ஒருவர், கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட சம் பவமும் ஜார்க்கண்ட் மாநி லத் தில் நடந்தது. இங்கு 14 வயது பழங்குடியின சிறுமி ஒருவர் கடந்த மாதம் பாலி யல் வன்கொடுமை செய்யப் பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்த 2 சம்பவங்கள் குறித்து தேசிய பெண்கள் மற்றும் குழந் தைகள் உரிமை பாது காப்பு ஆணையம் விசாரித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநி லத்தில் இளம் பெண் ஒருவர் மீது சமீபத்தில் ஆசிட் வீசப் பட்டது. அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப் பப்பட்டார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment