தமிழ்நாட்டில் புதிதாக 198 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 198 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, அக்.25- தமிழ்நாட்டில் நேற்று (24.10.2022) கரோனா தொற்றால் மொத்தம் 198 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 50 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண் ணிக்கை 35 லட்சத்து 90,856 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை 35 லட்சத்து 49,869 பேர் குணமடைந் துள்ளனர். நேற்று முன்னாள் (23.10.2022) மட்டும் 383 பேர் குணமடைந் தனர். தமிழ்நாடு முழுவதும் 2,939 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

தமிழ்நாட்டில் நேற்று முன்னாள் (23.10.2022) கரோனா தொற்று பாதிப்பு 206 ஆகவும், சென்னையில் 51 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில்...

நேற்று காலை (24.10.2022) இந்தியாவில் புதிதாக 1,334 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி யுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 23,193 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின் றனர். 1,557 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப் பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 219.56 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment