தமிழ்நாட்டில் புதிதாக 158 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 158 பேருக்கு கரோனா பாதிப்பு

  சென்னை,அக்.31- தமிழ்நாட்டில் நேற்று (30.10.2022) ஆண்கள் 87, பெண்கள் 71 என மொத்தம் 158 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்ச மாக சென்னையில் 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 91,891 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 52,111 பேர் குணமடைந் துள்ளனர். நேற்று மட்டும் 324 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 1,732 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 162 ஆகவும், சென்னையில் 41 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில்...

நேற்று (30.10.2022) காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 1,604 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 18,317 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2,081 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 219.63 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment