சென்னை,அக்.11- தமிழ்நாடு போக்குவரத் துறைக்கு புதிதாக பிஎஸ்-6 ரகத்தை சேர்ந்த 1,172 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
தமிழ்நாட்டின் 8 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலாவதியான பேருந்துகளை ஈடுசெய்யவும், காற்று மாசுபாட்டை குறைக்கும் பிஎஸ்-6 ரக பேருந்துகளை பயன்படுத்தும் வகையிலும் புதிய பேருந்துகளை கொள் முதல் செய்ய போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இதில் முதல்கட்டமாக 2,213 பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது. இவை அனைத்தும் டீசலில் இயங்கும் தாழ்தள பேருந்துகள் ஆகும்.
இந்நிலையில், மேலும் 1,172 பேருந்துகள் வாங்க போக்குவரத்து துறை முடிவு செய்தது. இதன்படி சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 402, விழுப்பும் கோட்டத்திற்கு 347, சேலம் கோட்டத்திற்கு 303, கோவை கோட்டத்திற்கு 315, கும்பகோணம் கோட்டத்திற்கு 303, மதுரை கோட்டத்திற்கு 251, நெல்லை கோட்டத்திற்கு 50 பேருந்துகள் வாங்கப்படவுள்ளன. ஜெர்மனியின் கேஎஃப் டபிள்யூ வங்கி நிதி உதவியின் கீழ் இந்தப் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment